ADVERTISEMENT

டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்

11:48 AM Aug 16, 2020 | rajavel

ADVERTISEMENT

டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சென்னை வந்துள்ள அவர் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். தோனியின் ஓய்வு அறிவிப்ப குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில், சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய, நாட்டிற்காக 3 சாம்பியன் ஷிப்களை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்; டோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT