Skip to main content

டி.டி.வி தினகரனும் பெங்களுரு சிறைக்குத் தான் செல்வார்: எம்.பி. குமார் பேச்சு

Published on 21/04/2018 | Edited on 23/04/2018


 

kumar


திருச்சி அ.தி.மு.க. மா.செ. பதவி கிடைத்தவுடன் எம்.பி. குமார் கட்சிகாரர்கள் எல்லோரையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார். நேற்று முதல் முறையாக மலைக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட 10 வார்டு வட்ட செயலாளர்கள் ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்ப்பு செயல்வீரர் கூட்டம் நடத்தினார். 
 

இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டிருருந்த மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் தீடிர் எனக் கூட்டத்தைப் புறக்கணித்தார். இதைப் போல் தலைமை ஏற்று நடத்திக்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கூட்டத்திற்கு வராமல் அவரவர் அலுவலகத்திலேயே இருந்து புறக்கணித்தனர். இதே போல் மாநகரில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலர் கார்த்திகேயன், சுரேஷ்குப்தா, வெல்லமண்டி சண்முகம் உள்ள பல முக்கியப் பொறுப்பாளர்கள் எல்லோரும் புறக்கணித்தனர். 
 

அமைச்சர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட மா.செ. குமார் தன்னுடைய பலத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் 10 வார்டுகள் மட்டுமே கூட வேண்டிய இடத்திற்குத் திருச்சி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கட்சியினரை வரவழைத்து கூட்டத்தை நிரப்பித் திக்குமுக்காட வைத்தார். 
 

கூட்டத்தில் பேசிய எம்.குமார், நான் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாக்கு வித்தியாசத்தைப் பார்த்து தான் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார். இந்தக் கட்சியில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்த பலர் எந்தப் பலனும் அனுபவிக்காமல் இருக்கீங்க என்பது எனக்குத் தெரியும். உள்ளாட்சி தேர்தல் வரபோகிறது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே இங்கே முன்னுரிமை. 
 

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது. மீண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் பல வருடங்களாக அவரை சுற்றியிருந்து சம்பாதித்த கூட்டம் கட்சியைக் கைப்பற்ற நினைத்தது. ஆனால் அவர்களுக்குக் கிடைத்தது பெங்களுர் பரப்பான அக்ஹகாரம் சிறைச்சாலை தான். அவர்களைப் பின்பற்றிச் செல்லும் டி.டி.வி தினகரனும் அதே பெங்களுரு சிறைக்குத் தான் செல்வார்கள். 
 

திருச்சி மாநகரில் உள்ள முக்கியமான நிர்வாகிகள் 160 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கட்சி பத்திரிக்கைக்குச் சந்தா செலுத்தியிருக்கிறேன். இனி மேல் ஒவ்வொரு பகுதிக்கு 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கட்சி பத்திரிக்கை சந்தாவை என்னுடைய சொந்த பணத்திலே கட்டுவேன். 
 

சிறப்பாகச் செயல்படும் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் ஆகியோருக்குச் சிறப்புப் பரிசுகள் காத்திருக்கிறது. அது என்ன என்பதைப் பிறகு அறிவிப்பேன். இனிமேல் நடைபெறும் கட்சி கூட்டத்திற்குத் தொடர்ந்து 3 முறைக்கு மேல் வராமல் இருக்கும் நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள். யார் கட்சியில் தொடர்ந்து பணியாற்றுகிறார்களோ அவர்களுக்குப் பதவி வழங்கப்படும் என்று அறிவிப்புகளை அள்ளித்தெளித்தார். இந்தக் கூட்டம் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த கூட்டம் அல்ல கட்சியின் தொண்டர்களே ஏற்பாடு செய்த கூட்டம் என்றார். இனி வார்டு வார்டாக அடுத்த ஜீன் வரை ஆலோசனை கூட்டத்திற்காகப் பட்டியலை அறிவித்தார். 
 

இந்தக் கூட்டத்தைத் தலைமை ஏற்க்க வேண்டியவர்கள் வராதால் புதிய பகுதி செயலாளர் பொறுப்பு போடும் வரை வணக்கம் சோமு என்பவரை பொறுப்பாளராக நியமிக்கிறேன். அவர் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை செய்து புதிய பகுதி செயலாளரை தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள் என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.