Skip to main content

“மவுண்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை” - செங்கோல் விவகாரத்தில் உண்மையை உடைக்கும் சிதம்பரம் 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Mountbatten is not in Delhi” Chidambaram breaks the truth on Scepter issue

 

“ஆகஸ்ட் 14 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை. அன்று அவர் பாகிஸ்தானில் இருந்தார்” என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

 

காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புனை கதைகள் அதிகம் வருகிறது. நேற்று கூட ஆளுநர் புனை கதையை ஜோடித்து நிறைய கதை சொல்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் நேருவின் வரலாற்றையும் எழுதியுள்ளார்கள். ராஜாஜியின் வரலாற்றையும் எழுதியுள்ளார்கள். அவர்கள் சொல்வது, திருவாவடுதுறை ஆதினம் இங்கிருந்து ரயிலில் சென்றது. விமானத்தில் அல்ல. ஆகஸ்ட் 14 ஆம் தேதி 1947 மாலையில் நேருவின் வீட்டு வாசலுக்கு சென்று அவரை பார்க்க விருப்பம் என சொல்லியுள்ளனர். வந்த இடத்தில் நேருவிடம் உங்களுக்கான நினைவுப் பரிசாக இதை தருகிறேன் என செங்கோலை கொடுத்துள்ளனர். அதையும் நேரு வாங்கியுள்ளார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவுப் பரிசுகள் வந்தன. அந்த நினைவுப் பரிசுகளை பத்திரப்படுத்தி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள்.

 

ஆகஸ்ட் 14 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை. அன்று அவர் பாகிஸ்தானில் இருந்தார். அன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம். அதை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குத்தான் டெல்லி வருகிறார். அதன் பின் அவர் இல்லத்திற்கு சென்று குளித்து உணவருந்தி உடைமாற்றிக்கொண்டு அதன் பின்பே இந்திய சுதந்திர தினவிழாவை கொண்டாட இரவு 11.30 மணியளவில் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. நேரு உரையாற்றுகிறார். அலகாபாத் அருங்காட்சியகத்தின் தலைமை அதிகாரி பேட்டி கொடுத்துள்ளார். அவர் சொல்வது என்னவென்றால், செங்கோலை அருங்காட்சியகத்தில் பேழையில் வைத்து நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல் என எழுதியுள்ளனர். நேருவின் கைத்தடி என எழுதவில்லை. இதெல்லாம் வரலாற்று புனை கதை.

 

வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவதுதான் உண்மையான வரலாறு. மற்றவர்கள் எழுதுவதெல்லாம் புனைகதை.  மோடி அரசை பொறுத்தவரை சுதந்திரமே இவர் பிரதமராக வந்த பின் தான் வந்தது, அதற்கு முன் சுதந்திரமே இல்லை என சொல்லுவார்கள் போல. மல்யுத்த வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 30 நாட்கள் போராட்டம் நடக்கிறது. உள்துறை அமைச்சரோ யாராவது சென்று அவர்களை சந்திக்க வேண்டுமே. போராட்டம் நடத்துபவர்களிடம் பேச வேண்டுமே. 30 நாட்கள் அவர்களை உதாசீனப்படுத்தி அதன் பின் அவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மல்யுத்த வீரர்களை விட பயில்வான்களாக காவல்துறையினர் உள்ளனர்” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.