Skip to main content

தி.மு.க.வில் இணைந்த 300க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் (படங்கள்)

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன் - கழக சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சலீம்பாஷா, மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஜே.விஜயகுமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் எம்.சுபலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினிநாகராஜ், காவேரிபட்டிணம் ஒன்றிய இணைச் செயலாளர் ஏகேஜி.மணிகண்டன், காவேரிபட்டினம் நகர இணைச் செயலாளர் கே.காமராஜ், காவேரிபட்டினம் நகர இணைச் செயலாளர் பாரதிராஜா, கிருஷ்ணகிரி ஒன்றிய இணைச் செயலாளர் மோரனள்ளி, கிருஷ்ணகிரி நகர வர்த்தக அணிச் செயலாளர் ரியாஸ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் பழனி, பர்கூர் ஒன்றிய இணைச் செயலாளர் எச்.நிசார், ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.மார்க்கண்டேயன், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ரியாஸ்கான், மத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.சீனிவாசன், வி.வடிவேலன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கண்ணதாசன், எஸ்.சௌந்தர், விவசாய அணிச் செயலாளர் எம்.டி.என்.சின்னதம்பி, இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.சரவணன், மகளிர் அணி இணைச் செயலாளர் ஆர்.மணிமாலா, துணைச் செயலாளர் வளர்மதி, செயற்குழு உறுப்பினர்கள் பேபி, தேவி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும்; 

 

தருமபுரி மாவட்டம், மாவட்ட இணைச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில் அரூர் ஒன்றியச் செயலாளர் ரஜினிமாறன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்.பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ரஜினிகாந்த், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பி.பானுமதி பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் எம்.குமரபிரபு, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெருமாள், அரூர் ஒன்றிய இணைச் செயலாளர் ஏ.அல்லிமுத்து, அரூர் ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.கந்தவேல், குபேந்திரன், அரூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.கலையரசன், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஹரிராம்,பிரபு, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சாதிக்பாட்ஷா, எம்.சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சரவணன், ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் குபேந்திரன், ஒன்றிய விவசாய துணைச் செயலாளர் ராஜேந்திரன், நகர பொறுப்பாளர்கள் செட்டி (எ) செந்தில், குமார், நகர செயற்குழு ஜி.வெங்கட்ராமன், நகர இளைஞர் அணி செயலாளர் டி.அஜித்குமார், நகர பொறுப்பாளர் பி.தளபதி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் சாந்தி, ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் வேடியம்மாள் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த  150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். 

 

அப்போது முதன்மைச் செயலாளர் கே.என். நேரு எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., தருமபுரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ., சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன், ஆகியோர் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.