Skip to main content

சென்னைக்கு மோடி வருகை! அமித்சாவுக்கு பறந்த தமிழக பாஜக பஞ்சாயத்து! 

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

 

இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை உலகமே உன்னிப்பாக கவனித்தப்படி இருக்கின்றன. இரண்டு நாள் அரசு முறைப் பயணத்திட்டமாக சென்னை வரும் சீன அதிபரை வரவேற்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை 11.15-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. இவரை வரவேற்பதில் தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜகவில் பஞ்சாயத்து வெடித்திருக்கிறது.      

 

Amit Shah



பிரதமர் மோடி சென்னை வரும்போதும், சென்னையிலிருந்து டெல்லிக்கு திரும்பும் போதும் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அணி வகுத்து அவரை வரவேற்பதும் வழியனுப்பி வைப்பதும் ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த அணி வகுப்பில் மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. 
 

அந்த வகையில், சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த மாமல்லபுரம் வரும் மோடியை, சென்னை விமானநிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிஹாப்டரில் அவர் ஏறும் போதும், மாமல்லபுரத்தில் மோடி தங்கும் தாஜ் ஃபிஷர்மென் கேவ் நட்சத்திர ஹோட்டலிலும் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதே போல திரும்பிச்செல்லும் போதும் இதே பாயிண்டுகளில் அவருக்கு வழியனுப்பு நிகழ்வும் நடக்கவிருக்கிறது. 


 

 

இந்த வரவேற்பு மற்றும் வழியனுப்பு நிகழ்வுகளில் தெலங்கானா கவர்னரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்திரராஜனின் ஆதரவாளர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற அதிர்ப்தி தற்போது தமிழக பாஜகவில் வெடித்து வருகிறது. குறிப்பாக, மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரரன், அரசக்குமார், எம்.என்.ராஜா, பாஜகவின் ஊடகப்பிரிவின் மாநில தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, துணை பொருப்பாளர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மோடியை வரவேற்கும் குழுவில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் தமிழிசையின் ஆதரவாளர்கள் என்பதால் ஒட்டுமொத்தமாக அவர்களை ஓரங்கட்டியிருக்கிறார்கள். மேலும் இவர்கள் அனைவரும் தமிழிசை கவர்னராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள். மரபுகளை புறக்கணித்துவிட்டு அதற்கு மாறாக, கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ள சிலரை வரவேற்கு குழுவில் இணைத்துள்ளனர். இந்த விவகாரத்தால்  தற்போது தமிழக பாஜகவில் குமுறல்கள் எதிரொலிக்கின்றன. 


 

 

இது குறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ பிரதமரை வரவேற்பதில் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள், அணி தலைவர்கள், பொறுப்பளர்கள் என பலரும் பங்கேற்பார்கள். தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்த வரைக்கும் இந்த ப்ரோட்டகால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது தலைவர் இல்லை என்பதால் ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்கள். அதேசமயம், தமிழிசை ஆதரவாளர்கள் யாரும் பிரதமரை நெருங்கிவிடாதபடிக்கு ஒரு குரூப் காய்களை நகர்த்தியுள்ளது. அதன் ஒரு கட்டமாக மோடியை வரவேற்பதில் தொடங்கி நிகழ்ச்சியின் எந்த ஒரு இடத்திலும் மோடியை தமிழிசையின் ஆதரவாளர்கள் சந்தித்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக வேலைப் பார்த்துள்ளனர். அந்த வகையில் பிரதமரை வரவேற்பதில் தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கட்சியின் தேசிய தலைவர் அமீத்சாவிற்கு புகார்கள் பறந்திருக்கின்றன ‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழக பாஜகவினர்.  
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.