Skip to main content

மோடி ஆட்சியில் 2,920 மதக்கலவரங்கள் நடத்தப்பட்டு, 320 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் - கே. பாலகிருஷ்ணன்

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

 

In Modi's regime, 2,920 religious fight were happened and 320 people were killed

 

இவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரங்கிப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், இந்தத் தேர்தல் நாடு விடுதலை அடைய தீர்மானிக்கிற தேர்தல்.  அதிகாரத்தை பயன்படுத்தி எதிர் கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். பறக்கும்படை, வருமான வரி சோதனை என மிரட்டி அச்சுறுத்தி முடக்க நினைக்கிறார்கள். தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளது. இப்படி வருமான வரி சோதனை என்ற பெயரில் சோதனை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டார்.
 

எடப்பாடி, ஓபிஎஸ், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்ய இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்தால் வரும் 3-ம் தேதி கோவையில் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் ஆலோசனை செய்து  தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்தக் கூடிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
 

கோடைக் காலம் என்பதால் எடப்பாடிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது மோடி நல்ல பிரதமர் என்று கூறுகிறார். அவர் தமிழகத்திற்கு என்ன சாதித்தார். எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.
 

சந்தர்பவாத கூட்டணி சேர்ந்துள்ள ராமதாசும் வெய்யிலால் குழம்பிப்போய் எல்லா முதல்வரையும்விட எடப்பாடிதான் சிறந்தவர் என்று கூறுகிறார். அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டை கவர்னரிடம் கொடுத்துவிட்டு தமிழகத்தில் சரியான ஆட்சி நடக்கிறது என்கிறார். அவரது நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்காக துரோகி என்று கூறியவரை தற்போது தியாகி என கூறுகிறார். தூத்துகுடியில் 15 பேரை சுட்டு கொன்றவரை நல்லவர், தியாகி என்பது  நல்ல வியாபாரம் நடந்து முடிந்துள்ளதால் தான் இப்படி பேசி வருகிறார்.  
 

அதிமுக வலுவான கட்சி என்கிறீர்களே ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. இரண்டு ஆண்டுகளாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தாமல் தள்ளிக்கொண்டே செல்கிறீர்களே ஏன் என்று கேட்டார். தேர்தல் நடத்தி இருந்தால் டெபாசிட்கூட கிடைத்திருக்காது. 
 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு எதிர் அலை வீசுகிறது. மற்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பிஜேபி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த பரங்கிப்பேட்டையில் சுனாமியின் போது நூற்றுக்கணக்கான மீனவர்கள் பிணங்களாக கிடந்தார்கள் அவர்களை இங்குள்ள இஸ்லாமிய சமூக மக்கள் அரவணைத்து எடுத்துஅடக்கம் செய்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். ஆனால், பி.ஜே.பி.யின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையினரிடையே மோதலை உண்டாக்கி இந்தியாவின் பண்பாடு கலாச்சாரத்தை சீர்குலைய செய்கிறது. தேசத்தின் தந்தை காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்கள். அவர் குறித்து பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள் இது எவ்வளவு கண்டனத்துக்குரியது. மோடியின் ஆட்சியில் 2920 மதக்கலவரங்கள் நடத்தப்பட்டு 320 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.   
 

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயிகளுக்கு ஒரு பைசாகூட தள்ளுபடி செய்யவில்லை. அவர் அம்பானிக்கும் அதானிக்கும் கைக்கூலியாக செயல்படுகிறார். இந்திய நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுத்த மோடியை கைது சிறையில் அடைக்கவேண்டாமா? மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்த பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதன்பின் தற்போதுள்ள நிலையில் பரங்கிப்பேட்டை இருக்காது. டெல்டா மாவட்டங்கள் அழிந்து சுடுகாடாக மாறும். கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து 7 பேர் விடுதலை நடைமுறைப்படுத்துவோம் என்கிறார்கள். இதற்கு முன் யார் ஆட்சியில் இருந்தார்கள்? தமிழ்நாட்டில் கையாலாகாத எடப்பாடி ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று மே 23ஆம் தேதி புதிய சரித்திரமாக மோடி தூக்கி எறியப்படும் செய்தி வரும். அதேபோல் எடப்பாடி ஆட்சியும் அகற்றி தூக்கி எறியப்படும். அரசியல் சாசனத்தையே மிதிக்கிற பேய் ஆட்சியாக மோடி ஆட்சி திகழ்கிறது இது நீடிக்க கூடாது. சாதி மத கலவரங்கள் தூண்டி சாதிய வர்ணம் பூசப்பட்டு பதவி சுகத்தை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிஜேபி அரசு செயல்பட்டது.  தற்போது ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது.
 

 காடுவெட்டி குருவை விஷம் வைத்து கொன்றுவிட்டார்கள் என்று அவரது அம்மா சி.பி.ஐ. விசாரணை கேட்டுள்ளார். ராமதாஸ் சமூகப் பாதுகாப்பிற்காக இல்லை. அவரது குடும்பத்தை பாதுகாக்கவும் அன்புமணியை அமைச்சராக்கவும்தான் பாடுபடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் திருமாவின் மீது சாதிய சாயங்கள் மூலம் அவதூறுகளை பரப்புகிறார்கள். அவர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட தலைவர்., ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல. கடந்த  பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போது எந்த ஒரு அசம்பாவிதமும் இந்த தொகுதியில் நடைபெறவில்லை. ஆகவே ஏழை எளிய மக்களின் கோரிக்கை பாராளுமன்றத்தில் ஒலிக்க அவருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு... புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு...

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

 

political reservation for scheduled caste extended

 

 

70 ஆண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் இந்த இடஒதுக்கீடு முடிவடைகிறது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது, அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான இடஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை.

இந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் ஆங்கிலோ இந்தியன் பிரிவை மட்டும் தவிர்த்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது இதுகுறித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 296 ஆங்கிலோ இந்தியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 84 பட்டியல் இன உறுப்பினர்களும், 47 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். மாநில சட்டசபைகளில் 614 பட்டியல் இன உறுப்பினர்களும், 554 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில், மேற்கண்ட இரண்டு இனத்தினரும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இருப்பினும் என்ன காரணத்துக்காக, இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதோ, அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை இடஒதுக்கீடு நீடிக்கும்" என தெரிவித்தார். பின்னர் நடந்த இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 352 பேரும் வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மசோதா நிறைவேறியது.

 

 

Next Story

வேலூரில் கூட்டணி கட்சியின் ஓட்டுகள் சிதறியதால் வெற்றி யாருக்கு? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது. தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்தார். ஆளும்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்ற முயலும் என தி.மு.க. தரப்புக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை குழு தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. அனைத்து வாக்குச்சாவடிகளையும பதட்டமானவை என அறிவிக்க வேண்டும் என மனு தந்ததால் அனைத்து சாவடிகளுக்கும் பாதுகாப்பு பலமாக போடப்பட்டது.
 

dmk



வாக்குப்பதிவன்று தொகுதியை வலம்வந்தபோது, காலை 10 மணி நிலவரப்படி 7 சதவிகிதம் தான் வாக்குப்பதிவு நடை பெற்றிருந்தது. இதுபற்றி மையத்துக்கு வெளியே அமர்ந் திருந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ""இந்த ஒற்றைத் தொகுதி தேர்தல் இடைத்தேர்தல் போல் நடைபெற்றதால் மக்களுக்கும் கட்சியினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு சப்பென போய்விட்டது. நாங்கள் 300 ரூபாய் தந்தோம், தி.மு.க. 200 ரூபாய் தந்தது. இந்தப் பணத்தை தந்தபோது மக்கள் சந்தேகத்தோடு பார்த்தார்கள். இதுதான் என உறுதியாக தெரிந்தபின் சோர்ந்துவிட்டார்கள். இதனால்தான் நாங்களும் வீடு வீடாகப் போய் ஓட்டுப்போட வா என அழைத்து வரவில்லை'' என்றார்கள்.

 

vellore



வாக்குப்பதிவன்று பூத் செலவுக்கு ஒரு பூத்துக்கு தி.மு.க. 15 ஆயிரமும், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 25 ஆயிரமும் தந்து ஊக்கப்படுத்தினர். இன்னும் கூடுதலாக தருவார்கள் என எதிர்பார்த்த பூத் கமிட்டி நிர்வாகிகள் நொந்துபோய் விட்டனர். இதேபோல் பூத்துக்கு வெளியே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் களத் தில் நின்றன. தி.மு.க.வோடு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க. நிர்வாகிகள் யாரும் கண்ணில்கூட தென்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளைத் தேடியும் கிடைக்கவில்லை. தொகுதியில் உள்ள பா.ம.க. வாக்குகளை, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வளைத்து விட்டார், அதேபோல் தலித் ஓட்டுக்களை ஏ.சி.சண்முகம் வளைத்துவிட்டார் என்கிறார்கள் களத்தில் உள்ள கட்சியினரே.

 

dmk



இந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் ஓட்டு, காட்பாடி காந்திநகர் முகவரியில் உள்ளது. அது வேலூர் மாநகராட்சி பகுதியாக இருந்தாலும், காட்பாடி சட்ட மன்றத் தொகுதிக்குள் -அதாவது அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அதேபோல் ஏ.சி.சண்முகத்தின் ஓட்டு, ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இத னால் இருவராலும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் மட்டுமல்ல சில சுயேட்சை வேட்பாளர்கள், பதிவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, குடியாத்தம் நகரில் காந்திநகர் பகுதி மக்களுக்காக அங்குள்ள அரசுப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் பதட்டமான சாவடி என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த நிலையில், அந்த அறையை திறக்க வந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அறையின் பூட்டை உடைத்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் திருடப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த 10 கணினிகள் மற்றும் ஒரு ஜெராக்ஸ் இயந்திரமும் திருட்டுப் போயிருந்தது. சி.சி.டி.வி. கேமராக்கள், கணினிகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து புகார் தரப்பட்டது.

மதியம் 12 மணி நிலவரப்படி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவின் சதவிகிதம் மந்தமாக இருந்ததால், தொகுதியின் எம்.எல்.ஏ. நந்தகுமார் களத்தில் இறங்கி, இறுதியில் 62% வாக்குப் பதிவாகும்படி பார்த்துக் கொண்டார். இதே போல்தான் ஆம்பூர் தொகுதியில் எ.வ.வேலுவின் ஆட்கள் சுறுசுறுப்பு காட்டியதால் வாக்குப் பதிவின் சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் அமைச்சர் நிலோபர் கபிலின் தொகுதியான வாணியம்பாடியில் கடைசி வரை 52% இருந்ததைப் பார்த்து அ.தி.மு.க.வினரே அதிர்ச்சியாகிவிட்டனர்.

இறுதிக்கட்ட நிலவரமாக வேலூர் எம்.பி. தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. முஸ்லிம் சமுதாய வாக்குகள் அதே அளவில் பதிவானாலும் அச்சமுதாயத்தின் பெண்கள் வாக்காளர்களின் வாக்குகள் அவ்வளவாக பதிவாகவில்லை. ஆனால் துரைமுருகன் எதிர்பார்த்திருந்த மற்ற சமுதாய வாக்குகள் அதிக அளவில் பதிவாகி, தி.மு.க. தரப்பிற்கு தெம்பைத் தந்துள்ளன. வாக்குப் பதிவிற்கு முதல் நாள் இரவு, ஓட்டுக்கு தலா 1,000 என ரேட்டை உயர்த்திய ஏ.சி.சண்முகம், வாக்குப் பதிவு நாளன்று பிற்பகல் வரை இதே டெக்னிக்கை கையாண்டார். தி.மு.க. தனது வாக்குகளை உறுதிப்படுத்தியது. ஆனாலும் வாக்குப்பதிவு முடிந்தபின் இரு கழகங்களுமே பதற்றத்தில்தான் இருந்தன.