பா.ஜனதா 300 இடங்களில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

Advertisment

S. Ve. Shekher

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நாடாளுமன்ற தேர்தலில் ஊடகங்கள் கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவலை பரப்புகிறது. ஒவ்வொரு ஊடகமும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்துதான் உள்ளது. மக்கள் தங்களது நிலைப்பாட்டை ஊடகத்தினரிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

Advertisment

எனவே, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. தற்போதைய தேர்தலில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை அரசியல் கட்சியினர் பேசி வருகிறார்கள். சில ஊடகங்கள் மோடியை திருடன் என்று சொல்வதை நாகரிகம் போலவும், காங்கிரசை மோடி குற்றஞ்சாட்டினால் அநாகரிகம் போலவும் கருத்துகள் பரிமாறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் கட்சியை விட, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி அதிக வாக்குகளை பெறும். கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெறுவார்கள். அடுத்து வர உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல்ஹாசன் கட்சி இருக் கும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழ்நாட்டில் 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதனால், பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. ரஜினிகாந்த் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும்போது நிச்சயம் அவரும் அரசியலுக்கு வருவார். அவரது தலைமை கூட தமிழகத்தில் வரலாம். இவ்வாறு தெரிவித்தார்.