Skip to main content

“மோடி அரசின் தடுப்பூசி போடும் வியூகம் ஆபத்தானது..” - கே.எஸ். அழகிரி 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

"Modi government's vaccination strategy is dangerous ..." - KS Azhagiri

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி இந்திய குடியரசு தலைவருக்கு அளிக்க வேண்டிய கடிதத்தை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் அவரது அலுவலகத்தில் வழங்கினார்.

 

பின்னர் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடி அரசு கரோனாவை எதிர்த்து போராடும் கடமையை, செய்ய தவறிவிட்டது.  தவறான நிர்வாகத்தால் மோடி அரசு கிரிமினல் குற்றத்தை இழைத்துள்ளது என்பதுதான் உண்மை. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு. ஆனால் மோடி அரசின் தடுப்பூசி போடும் வியூகம் ஆபத்தானதாகவும், தவறானதாகவும் இருக்கிறது” என குற்றம் சாட்டினார்.

 

 தடுப்பூசி போடுவதற்கான கடமையை செய்ய மோடி அரசு தவறிவிட்டது. தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதியிருந்து அரசு முற்றிலும் மறந்து விட்டது. மோடி அரசு வேண்டுமென்றே தடுப்பூசி திட்டத்தை மெதுவாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஒரே தடுப்பூசிக்கு பலவிதமான விலைகளை நிர்னைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என்றார். 

 

மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான முதல் ஆர்டரை கடந்த ஜனவரி மாதம் தான் மோடி அரசு கொடுத்துள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மோடி அரசு மாநில அரசுகளுக்கும் சேர்ந்து இன்றுவரை 39 கோடி தடுப்பூசிகளை மட்டுமே ஆர்டர் செய்துள்ளது. இதுவரை இந்திய மக்கள் தொகையில் 3.17 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வயதானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.  இந்த சூழலில் கரோனாவின் மூன்றாவது அலையின் போது நமது மக்களை எப்படி காப்பாற்ற முடியும் என்ற கேள்விக்கு மோடி அரசிடம் இருந்து பதில் இல்லை.

 

நம் நாட்டில் கரோனா தொற்றில் மக்கள் பாதிக்கப்பட்டபோது மோடி அரசு 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசி மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்த தேசத்துக்கு இழைத்த மிகப் பெரிய அவமதிப்பு. தடுப்பூசிகளுக்கு பல விலைகளை மோடி அரசு நிர்ணயித்தது மக்களின் துயரத்தில் இருந்து லாபம் ஈட்டியதற்கு இதுவே உதாரணம். தடுப்பூசிகளை மத்திய அரசு ரூ 150, மாநில அரசுகளுக்கு 300 தனியார் மருத்துவமனைக்கு 600 என பல்வேறு விதங்களாக விற்பனை செய்து மக்களின் துயரத்தில் இருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசு துணை போகிறது. எனவே பாஜக அரசு தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து அதனை மாநில அரசுக்கும், தனியார் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது. 

 

"Modi government's vaccination strategy is dangerous ..." - KS Azhagiri

 

 தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கரோனா ஒழிப்பதற்காக பல்வேறு செயல்களில் சிறப்பக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்கள்.

 

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலை நோய்வாய்ப்பட்டு உள்ளது இதனை தமிழக அரசு தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்கிறது. இதற்கு பதில் கூறாத மோடி அரசு மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளருக்கு எப்படியெல்லாம் தண்டனை அளிக்க முடியும் என்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

 

150 ஆண்டுகள் தடுப்பூசிகள் தயாரிப்பில் அனுபவமிக்க நமது பொதுத்துறை நிறுவனத்திற்கு அனுமதி வழங்காதது வேதனைக்குரியது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை முற்றிலும் தவறானது.  வீராணம் ஏரியில் தற்போது தண்ணீரின்றி காய்ந்து உள்ளது. எனவே அதிலுள்ள களிமண்ணை அனைத்து மக்களும் இலவசமாக எந்த விதிமுறைகளும் இல்லாமல் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் வீராணம் ஏரி தானாக தூர்வாரப்படும். இதனால் அதிக தண்ணீரை தேக்கி வைக்கப்படும் என கூறினார்.  இவருடன் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர்  ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மத்திய மாவட்ட  தலைவர்  திலகர், மாநில பொது செயலாளர் சேரன், மாநில செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.