Skip to main content

அமித்ஷாவிடம் கோபமான மோடி... இது தான் காரணமா? அதிருப்தியில் பாஜகவினர்!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

மத்திய அரசுக்கு எதிராக நாடெங்கும் நடக்கும் போராட்டத்தால் இப்போது பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குமே மோதல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அவரது மிதவாதத் தன்மைக்கு எதிராக அத்வானி தீவிரமாக இருந்தார். அத்வானியிடம் தீவிர செயல்பாடு அதிகரிக்கும் போதெல்லாம், தனக்கும் பா.ஜ.க.வுக்கும் கெட்ட பெயரை அது ஏற்படுத்தும் என்று  உணர்ந்து, வாஜ்பாய், அத்வானியை தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இழுத்து வைத்திருந்தார். 

 

bjp



இப்போது, பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று, தனது பிரதமர் பதவியை நீட்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அமித்ஷாவோ, நாடாளுமன்றத்தில் அதிக பலத்தோடு தாங்கள் இருக்கும் போதே தங்கள் இந்துத்துவா கோட்பாடுகள் அனைத்தையும் சட்டமாக்கி விட வேண்டும் என்று துடிக்கிறார். இந்த எண்ணத்தில்தான், தான் கொண்டு வர நினைத்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவையும் அவசரமாக நிறைவேற்றியுள்ளார் என்று கூறுகின்றனர். ஆனால் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.  மோடி எதிர்பார்த்ததை விட எதிர்ப்புச் சூறாவளி நாடு முழுக்க சுழன்றடிக்க ஆரம்பித்ததும், அவர் திகைத்து போயிட்டார் என்கின்றனர். அதிலும் மாணவர்கள் கையிலெடுத்த போராட்டம் நாடு முழுவதும் பரவியதும் அவரை மிரட்டத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தலைவர் என்கிற இமேஜை உருவாக்க முனைந்த மோடிக்கு, இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் நெருக்கடியை உண்டாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துபாய் என்று பல்வேறு நாடுகளிலும் மோடியைக் கண்டித்து போராட்டங்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர். 


 

 

amithsha



போதாக்குறைக்கு மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, மதச்சார்பற்ற இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் விதமாக இதுபோன்ற ஒரு சட்டம் நிறைவேறி இருப்பது வருத்தத்தைத் தருகிறது. அதேபோன்ற நடவடிக்கையை இங்கு மலேசிய அரசு எடுத்தால் என்ன நடக்கும்? இங்கு இருக்கும் இந்துக்கள் பலரும் அதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்திருக்கிறார். 


இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்த மோடி, அமித்ஷாவிடம் கோபப்பட்டிருக்கிறார். அதோடு, நாடாளுமன்றத்திலேயே குடியுரிமைப் பதிவேடு முறை அனைத்து மாநிலங்களிலும் உறுதியாகக் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா சொல்லியிருந்த நிலையிலும், இது குறித்த அறிவிப்பு குடியரசுத் தலைவர் உரையிலேயே இருக்கும் நிலையிலும், இதற்கு மாறாக மோடி, குடிமக்கள் பதிவேட்டு முறை பற்றி உறுதியாக எந்தத் திட்டமும் இல்லை. அசாமில் அதை அமல்படுத்தியதற்குக் காரணம், நீதிமன்றம் உத்தரவிட்டதால் தான் என்று, டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி அமித்ஷாவுடனான முட்டல் மோதலைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருக்கிறதாக பா.ஜ.க. வின் உள்வட்டத்தில் சொல்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.