மோடி கேட்டுக் கொண்டபடி, பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் விளக்கேற்றிய நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் அதற்கு நேர்மாறாக இருந்தது. நீங்கள் சொன்னதை கேட்க இத்தனை கோடி மக்கள் இருக்கின்றனர். தற்போது இதுபோன்ற தலைவர் உலகத்தில் எங்கும் இருக்க வாய்க்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கும் கமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி, கரோனாவுக்கு எதிராக பால்கனியில் கைதட்டுவது- விளக்கு ஏற்றுவது உள்பட எதுவும் அடித்தட்டு மக்களுக்குப் பலன் தராதுன்னு காட்டமாக எழுதியிருந்தார்.
ADVERTISEMENT
மேலும், நோய்த்தொற்றைத் தடுப்பதில் உங்கள் பக்கம் நிற்போம். ஆனால், நீங்கள் திரும்பவும் தவறு செய்கிறீர்கள் என்றும், மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்” என்று கமல் தன்னோட கடிதத்தில் எழுதியிருப்பது மோடியையும் பா.ஜ.கவினரையும் அதிர வைத்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments