Skip to main content

திமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

கடந்த வாரம் 16 அம்ச கோரிக்கையோடு தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வுக்கும் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே ஒரு இணக்கமான போக்கை உருவாக்க ஒரு முயற்சி நடப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் தான், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்தனுப்பிய 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளாரகள். அப்போது, கலைஞர் எழுதிய "குறளோவியம்' புத்தகத்தையும், கலைஞருக்காகத் தயாரிக்கப்பட்ட நினைவு மலரையும் பரிசளித்தார்கள். புத்தகங்களைத் தன் இரு கைகளிலும் ஏந்தியபடி மோடி போஸ் கொடுக்க, அது பரவலாக ஷேர் ஆனது. ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் தி.முக. எம்.பி.க்களிடம் அக்கறையாக விசாரித்திருக்கிறார் மோடி.
 

dmk



மேலும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் சந்தேகப் பார்வை அதிகமாகியிருப்பதாக கூறுகின்றனர். மோடியுடன் தி.மு.க. டீல் போட்டிருப்பதாக பார்க்கிறார்கள். டெல்லியில் என்ன நடக்குது என்று முதல்வர் எடப்பாடி விசாரிக்க, டெல்லித் தரப்போ, மத்திய அரசுக்கு எதிராக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்திருந்த ஸ்டாலின், கவர்னரை சந்தித்தவுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றார். காரணம் அந்த சந்திப்பில் சில முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. அப்போது தி.மு.க. கொடுத்த புகார்களின் அடிப்படையில் எடப்பாடி அரசுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று அவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவும் இப்போது மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்று எடப்பாடிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இது மேலும் அவரைக் கவலையடையச் செய்திருப்பதாக கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.