Skip to main content

படத்திற்கு தடை! வெப் சீரிஸில் ரிலீஸ்! சர்ச்சையில் மோடி படம்?

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறைப் பற்றிய நரேந்திர மோடி பாலிவுட் படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். ஆனால், பிரதமர் மோடியின் பெயரிலான ஒரு வெப் சீரீஸ் எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. 
 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சீமாந்திராவில் இன்று தேர்தல் தொடங்கியே விட்டது. இந்நிலையில், தேர்தலையொட்டு ஏப்ரல் 11ல் பாலிவுட் இயக்குனர் ஓமங் குமார் இயக்கத்தில், விவேக் ஓபராய் நடித்து வெளியாக இருந்த படம் சர்ச்சைகளைக் கிளப்பியது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறபடியால், படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 
 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், படத்தின் ரிலீஸைத் தள்ளி வைக்க முடியாது என்று கூறினாலும், தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஏப்ரல் 10ல் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் முடியும் வரை படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அறிவித்துவிட்டது. இதனால், இன்று ரிலீஸாக இருந்த படம் வெளியாகவில்லை. 
 

இந்நிலையில், “மோடி - ஜர்னி ஆஃப் ஏ காமென் மேன்” என்ற தலைப்பில், வோடஃபோன் நிறுவனத்தின் செல்போன் செயலியான வோடஃபோன் ஃப்ளேயில், ஒரு வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை ஈரோஸ் ஒரிஜினல் நிறுவனம் தயாரித்துள்ளது. இது தேர்தல் சமயம் என்றாலும், பத்து தொடர்களைக் கொண்ட இந்த சீரிஸின் முதல் ஐந்து பாகங்கள் ரிலீஸாகி விட்டன. இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இது தொடர்பாக பேசியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ள உமேஷ் சுக்லா, “இது அரசியல் சார்ந்த படம் கிடையாது. எனக்கு ரொம்பவும் பிடித்த, சிறுவயதில் இருந்தே கஷ்டங்களை அனுபவித்து, மிகப்பெரிய உச்சத்தைத் தொட்ட ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியே பேசி இருக்கிறோம். தொடரின் ரிலீஸ் தேதி என்பது திட்டமிட்டு நடக்கவில்லை. தற்செயலாக நடந்தது. எனக்கு சட்ட விதிகளைப் பற்றியெல்லாம் தெரியாது. புகார் கொடுத்தார்கள் என்றால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்து இருக்கிறார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.