Skip to main content

மாநில அளவிலான நிர்வாகிகளுடன் கலந்துரையாட மு.க.ஸ்டாலின் திட்டம்..!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

MK Stalin's plan to discuss with state level executives meeting


மாநில அளவிலான நிர்வாகிகளுடன் கலந்துரையாட பிப்ரவரி 21 அல்லது 25 ஆகிய தேதிகளில் திருச்சியில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

 

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகவும் சோர்வுற்று இருக்கக் கூடிய கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என அனைவரையும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அடுத்த மாதம் திருச்சி சிறுகனூரில் ஒரு மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் வட்டச்செயலாளர் ஆரம்பித்து தலைமைக் கழகம் வரை இருக்கக்கூடிய அனைத்து பொறுப்பாளர்களையும் அழைத்து ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார். 

 

எனவே அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த சிறுகனூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 200 ஏக்கர் நில பரப்பளவை வாடகைக்கு பெறப்பட்டு, நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, கட்சியின் முதன்மைச் செயலாளர் நேரு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மண்டலம் உள்ளிட்ட நிர்வாகிகளோடு ஆய்வு செய்தார். 

 

மேலும், நாளை (19.01.2021) நாமக்கலில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாலை விராலிமலை பகுதியில் நடைபெறக்கூடிய கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் மாநில அளவிலான இந்த கலந்துரையாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகனூர் பகுதியில் உள்ள அந்த இடத்தைப் பார்வையிட்டு, ஆயத்த பணிகள் குறித்து விழா ஏற்பாட்டாளர்களோடு மு.க.ஸ்டாலின் கலந்துரையாடவுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.