Skip to main content

மோடி, எடப்பாடி ஆட்சிக்கு காவலாளி... - திமுக தலைவர் முக.ஸ்டாலின்

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

சிதம்பரம் மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து நேற்று இரவு சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டலின் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

 

stalin

 

இதில் திமுக. தலைவர்  முக.ஸ்டாலின், நடைப்பெற இருக்கிற மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மதவெறி பிடித்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கலைஞர் ஆட்சி இருந்தது. ஆனால் ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு அடையாளமாக தற்பொழுது உள்ள முதல்வர் எடப்பாடி ஆட்சி உள்ளது. 
 

தமிழகத்திற்கு தற்பொழுது வாரம் தோறும் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக  வருகிறார். ஆனால் கஜா புயல் பாதிக்கப்பட்ட போது மோடி வந்தாரா, இல்லை. தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியாவது தந்தாரா, இல்லை. மோடி ஆண்டிற்கு 2  கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று கூறினார். யாருக்காவது ஒருவருக்கு மத்திய அரசின் மூலமாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா. வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறினாரே செய்தாரா. குறைந்தது ரூ 15 ஆயிரம் அல்லது 15 ரூபாய், 15 பைசாவது வந்துள்ளதா, மோடி ஏழை தாயின் மகன் என்கிறார். டீ வித்துதான் பிரதமராக வந்தேன் என்கிறார். டீ விற்பது நல்ல தொழில் அது கேவலம் அல்ல. ஆனால், ஏழைகளைப் பற்றி நினைக்காமல் கார்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் தன்னை ஒரு காவலாளி என்கிறார். ஆமாம், நீங்கள் எடப்பாடி ஆட்சிக்கு காவலாளி. நீங்கள் காவலாளி அல்ல களவாணி. தமிழகத்தில் நடக்கும் அக்கிரம ஆட்சிக்கும், கொட நாடு கொலை சம்பவம், பொள்ளாட்சி சம்பவம் என அனைத்திற்கும் காவலாளியாக உள்ளார். இந்த தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மோடி சர்வாதிகாரி, எடப்பாடி உதவாக்கரை.
 

கலைஞர் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். அப்போது  அவர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஏழைகளின் முகம் மலர்ந்திருந்தது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து, மாற்றுதிறனாளிகள், திருநங்கைகளுக்கு நல வாரியம், உழவர் சந்தை, முதல்பட்டதாரிக்கு கல்வி உதவி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கலைஞர் செயல்படுத்தினார். மத்தியில் காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்த போது  காங்கிரஸ் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியது.
 

மத்தியில் உள்ள மோடி அரசு 5 ஆண்டுகளில், தமிழகத்தில் அதிமுக 8 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தார்கள். இந்த ஆட்சியில் தமிழகம் 50 வருடம் பின் நோக்கி சென்றுள்ளது. இந்து பத்திரிகை ரபேல் ஊழல் வழக்கு பற்றி எழுதி இருக்கிறார்கள். இது தவறு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் இந்து பத்திரிகை பாரம்பரிய பத்திரிகை அவர்கள் தவறாக செய்தி வெளியிடமாட்டார்கள் என்று கூறி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
 

நான் தேர்தல் பிரச்சாரத்தில் 3 கேள்விகளை முன் வைக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிது. கொடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி சம்பவம்  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று விஷயங்கள் மீது விசாரணை நடத்தி குற்றவாளிகளை ஜெயிலுக்கு அனுப்புவது எனது முதல் வேலை.
 

கலைஞர் இல்லாமல் முதல் முதலாக தேர்தலை சந்திக்கிறோம். அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவர் மகனாக உங்கள் முன் ஆதரவு கேட்டு நிற்கிறேன். அவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இந்த தொகுதியில் போட்டியிடும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற செய்ய வேண்டும். இதுபோல கடலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ரமேஷையும் வெற்றி பெற செய்யுங்கள்” என்று பேசினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.