Skip to main content

“விடுபட்ட பெண்களுக்கு தேர்தல் முடிந்த பின்பு உரிமைத்தொகை கொடுக்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 missing women will be entitled after the election says Minister sakkarapani

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு யூனியன்களிலும் அதுபோல் ஒட்டன்சத்திரம் டவுன் பகுதிகளில் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு  சேகரித்து வருகிறார்.

ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் உள்ள கருவூல காலனி, சம்சுதீன்காலனி, ஆர்எஸ்பிநகர், கேகே நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், ஏபிபிநகர், சத்யாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தும்மிச்சம்பட்டி, திருவள்ளுவர் சாலை ,நல்லாக்கவுண்டன் நகர், சாஸ்தா நகர், காந்தி நகர் உள்பட 18 வார்டுகளிலும் வேட்பாளர் சச்சிதானந்தத்துடன் திறந்தவெளி ஜீப்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 missing women will be entitled after the election says Minister sakkarapani

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான வெள்ளைச்சாமி, நகர்மன்றத் தலைவர் திருமலைசாமி, பூத் ஒருங்கிணைப்பாளர்களான முன்னாள் நகர்மன்றத்தலைவர் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே.பாலு, இளைஞரணி துணைஅமைப்பாளர் பாண்டியராஜன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும்,கவுன்சிலர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

அப்போது அங்கங்கே நூற்றுக்கணக்கான பெண்கள் கும்பம் ஆராத்தி தட்டுடன் வேட்பாளரையும், அமைச்சரையும் வரவேற்றனர். அதோடு மாலை, சால்வைகளை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது 13வது வார்டான தும்மிச்சம்பட்டி புதூரைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியான செல்வி தான் தனியார் காலேஜில் படிப்பை முடித்துவிட்டேன். ஆனால் அந்த கல்லூரியில் நான் பீஸ் கட்டாததால் என்னுடைய சான்றிதழை தர மறுக்கிறார்கள். அதனால் நான் வேலைக்கு போகமுடியாமல் தவிக்கிறேன். எனக்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்றுகேட்டார்.

 missing women will be entitled after the election says Minister sakkarapani

உடனே அமைச்சர் சக்கரபாணியும் கல்லூரி பீஸ் எவ்வளவு கட்டவேண்டும் என்று கேட்டார். அந்த மாணவி தொகையைச் சொன்னதும்  நானே கட்டிவிடுகிறேன் என்றார். 

அதைக்கேட்டு அந்த மாற்றுத்திறனாளி பெண்ணான செல்வி அமைச்சரை இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைச்சர் சக்கரபாணி அப்பகுதியில் பேசும்போது, "இந்த ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு தமிழக முதல்வர் மூன்று கல்லூரிகளை கொடுத்து இருக்கிறார். அதுபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் போகும் வழியில் ஐஏஎஸ்-ஐபிஎஸ்க்கான பயிற்சி மையமும் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டும் வருகிறது. விருப்பாச்சியில் தொழிற்பயிற்சி நிலையமும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நூறு கோடி செலவில் கரூரில் இருந்து காவேரி தண்ணீர் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் தொகுதி முழுக்கவே கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டு வருகிறது.

கூடிய விரைவில் அந்தபணிகள் நிறைவடையும். அதன்மூலம் தொகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் அளவுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மகளிர் உரிமைத்தொகையும் தொகுதி முழுவதும் கொடுத்து இருக்கிறோம். இதில் விடுபட்டு போய் இருந்தால் அவர்களுக்கு தேர்தல் முடிந்தபின் முழுமையாக கொடுக்கப்படும். நமது கூட்டணி வேட்பாளரான சச்சிதானந்தம் உள்ளூர்காரர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடியவர். மற்ற கட்சி வேட்பாளர் போல் வெளியூர்காரர் இல்லை. அதனால் உங்கள் வாக்குகளை அரிவாள் சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Strong room CCTV camera malfunction; Sensation in Erode

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.