Skip to main content

அமைச்சரின் பேச்சு காத்தோடு போச்சு.... மீண்டும்... மீண்டும்... மக்கள் போராட்டம்! 

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

 ariyalur cement factory - People question the land issue


அரியலூரில் இயங்கி வருகிறது அரசு சிமெண்ட் ஆலை. இதற்குத் தேவையாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆனந்தவாடி என்ற கிராமத்தில் 1983ஆம் ஆண்டில் 270 ஏக்கர் விவசாயிகள் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அப்போது ஒரு ஏக்கருக்கு 2,500 ரூபாய் என்று மிகவும் விலை குறைவாக வாங்கப்பட்டது. 
 


அப்போது அரசு அதிகாரிகளால் நிலம் கொடுக்கும் விவசாயிகளின் வாரிசுகளுக்களில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டது. 37 ஆண்டுகள் கடந்த பிறகும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்தபடி விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலை கூடுதல் சிமெண்ட் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஆலையை விரிவாக்கம் செய்தது. இதையடுத்து அதற்குத் தேவையான சுண்ணாம்பு கல் எடுக்க ஆனந்தவாடி கிராமத்திற்குச் சென்றனர். ஆலை தரப்பில் கிராம மக்கள் ஏற்கனவே தங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஆலை நிர்வாகம் நிறைவேற்றவில்லை, அப்படியிருக்கும்போது இப்போது சுண்ணாம்புக்கல் தோண்டக் கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள்.

ஆலை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் விவசாயிகள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் தலைமையில் அரசு அதிகாரிகளும் ஆனந்தவாடி விவசாயிகளும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 


அப்போது படிப்படியாக விவசாயிகளின் வாரிசுதாரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் உறுதியளித்தபடி வேலை அளிக்காமல் சுமார் 30 வெளியாட்களை வெளியூர்களிலிருந்து வேலைக்கு எடுத்துள்ளது அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம். இதன் பிறகு ஆனந்தவாடி கிராமத்தில் சுண்ணாம்பு கல்சுரங்கம் தோண்டுவதற்காக ஆலை அதிகாரிகள் சென்றனர். 

அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையின்போது அரசு அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை. எனவே எங்கள் பகுதியில் சுரங்கம் தோண்டக் கூடாது. வேலை வழங்க வேண்டும் அல்லது நாங்கள் அளித்த நிலத்தை எங்களிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சுரங்கம் தோண்ட வந்த வர்களைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர் ஆனந்தவாடி விவசாயிகள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ஆனந்தவாடியில் குவிக்கப்பட்டனர். அப்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் போராட்டம் நடத்திய விவசாயிகளை பஸ் மூலம் சிமெண்ட் ஆலை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
 

http://onelink.to/nknapp


அதன் முடிவில் நிலம் அளித்த விவசாயிகளின் வாரிசுகளில் 57 நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை அளிப்பது, அடுத்து தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று ஆலை நிர்வாகம், அரசு அதிகாரிகள், விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். ஏற்கனவே அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டதுபோல், இப்போதைய பேச்சுவார்த்தையினையும் காற்றில் பறக்க விடாமல் விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்க முன்வர வேண்டும் அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.