Skip to main content

அமைச்சரின் விளம்பர மோகம்... நெரிசலில் சிக்கிய மக்கள்...

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

தனியார் அரிசி ஆலை அதிபர்கள் 6 ஆயிரம் கிலோ அரிசியினை கரோனா நிவாரணமாக வழங்கியிருக்க, அதனைப் பார்வையிட வந்த அமைச்சர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் மோகத்தில் எவ்வித முன்னேற்பாடுமில்லாமல் அங்கேயே துவக்கி வைக்க அரிசியை வாங்கும் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

கரோனா ஊரடங்கு நிவாரணமாக, சிவகங்கை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாரிகள் சங்கத்தினர் மாவட்டம் முழுமைக்கும் தாலுகா வாரியாக இலவசமாக அரிசி வழங்க முன்வந்து சங்கத் தலைவர் படிக்காசு தலைமையில் ஒன்றிணைந்து காரைக்குடி தாலுகா பகுதிக்கு மட்டும் 6 ஆயிரம் கிலோ அரிசியினை வழங்கினர். ஆறாயிரம் கிலோ அரிசியும் காரைக்குடியிலுள்ள பள்ளி ஒன்றில் சேகரம் செய்து வைக்கப்பட்டிருக்க, அங்கேயே அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு தாலுகா அலுவலகத்தில் வைத்தே மக்களுக்கு அரிசியை வழங்குவதாக வருவாய்த்துறையினர் தரப்பில் அறிவுறத்தப்படிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமையன்று கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்ட திருப்புத்தூர் மற்றும் காரைக்குடி மீனாட்சிபுரம் பொதுமக்களுக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் தலைமையில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி மற்றும் 7 காய்கறிகள் 150 குடும்பங்கள் பெற்று பயன்பெறும் வகையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், அங்கிருந்துப் புறப்பட்ட அமைச்சர், ஆட்சியர் டீம் மக்களுக்கு வழங்குவதற்காக சேகரம் செய்து வைக்கப்பட்டிருக்கும் 6 ஆயிரம் கிலோ அரிசியை காணவும், தனியார் அரிசி ஆலை அதிபர்களுக்கு நன்றி கூறவும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு புறப்பட்டனர். இதற்கு முன்னதாக அமைச்சர் இங்கு அரிசி வழங்கவுள்ளார் என்ற வதந்தியின் அடிப்படையில் பள்ளியின் முன்புறம் ஆயிரக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்ற மக்களை காவல்துறை கலைத்து அனுப்பி வைத்தனர். சரியாக நண்பகல் 1 மணிக்கு அங்கு வந்த அமைச்சர் பாஸ்கரன் அம்பலத்திடம் அரிசியினை காண்பிக்க, ஆர்வமிகுதியில் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் விளம்பர மோகத்தில் அங்கிருந்த சில நபர்களுக்கு அரிசியை கொடுத்து துவக்கி வைத்து விட்டு வெளியே சென்றார்.

 

g



அவர் சென்ற சில நொடிகளிலேயே பள்ளியை சூழ்ந்த மக்கள் வாசற் கேட்டை தள்ளி, நெரிசலில் சிக்கி முட்டி மோதிக் கொண்டு உள்ளே நுழைய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னேற்பாடு இல்லாமல் கூட்டம் கூட தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினரும், காரைக்குடி துணைச்சரக டிஎஸ்பி.அருண் தலைமையிலான காவல்துறையினரும் கூட்டத்தினை கட்டுக்குள் கொண்டு வந்து அரிசியினைக் கொடுத்து சமாளித்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.