தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15.01.2021) சிகிச்சை பலனின்றி காலமானார்.

Advertisment

த.மா.கா. மூத்த தலைவராகவும் முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.