இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்125வது பிறந்தநாள் இன்று (23.01.2021) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் இன்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து,அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், மா.ஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், செய்தித்துறை செயலாளர் மகேசன்காசிராஜன், கூடுதல் இயக்குனர் சாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.