Skip to main content

அமைச்சர், அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார்! நடவடிக்கையைத் தடுக்கும் அரசு!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

mm


முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசமுள்ள தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கரோனா காலத்திலும் கோரப்படும் டெண்டர் ஊழல் குறித்து நக்கீரன் இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த டெண்டர்களை உற்று கவனித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படும் விசயங்களையும் அதில் பதிவு செய்திருந்தோம். 
 

இதனைத் தொடர்ந்து, இந்த ஊழல்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் தெரிவித்துள்ளது திமுக. இது குறித்து திமுகவின் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் விஜயக்குமார் ஐ.பி.எஸ்.சுக்கு அனுப்பி வைத்துள்ளார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
 

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்படும் ஊழல் புகார்களின் நிலை குறித்து, அத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’அமைச்சர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை தமிழக அரசின் உயர் மட்டத்தில் இருக்கும் பலரைப் பற்றி ஆதாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. புகார் கொடுக்கப்பட்டதை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியதிருக்கிறது. உடனே கோட்டையிலிருந்து, புகாரைக் கிடப்பில் வையுங்கள்; நடவடிக்கை வேண்டாம் என ஆர்டர் வந்து விடும். 
 

தவிர, ஊழல் தடுப்பு சட்டவிதிகளில் உள்ள குறிப்பிட்ட சில ஷரத்துகள் நடவடிக்கை எடுக்க முட்டுக்கட்டையாக இருக்கின்றன. அதனாலேயே, விரைந்து எங்களால் நடவடிக்கை எடுக்கவும் முடிவதில்லை. குறிப்பாக, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது எங்களுக்குப் புகார்கள் வந்தால் அதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஆணையராகத்  தலைமைச் செயலாளர் சண்முகம் தான் இருக்கிறார். அவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். ஆனால், அனுமதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. அதனாலேயே பல புகார்கள் கிடப்பில் கிடக்கின்றன’’ என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.