Skip to main content

வருமான வரித்துறையிடம் வசமாகச் சிக்கிய அமைச்சரின் ஆதரவாளர்கள்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

 Expect many key executives to get caught

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விஐபிக்களின் முக்கியக் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனின் நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 7 கோடி சிக்கியுள்ளது. 

 

இளங்கோவனுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களில் பள்ளிகள் இயங்கிவருகிறது. அப்பள்ளிகளுக்கு அங்கீகாராம் கொடுக்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மாலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் 25 பேர் 6 வாகனத்தில் வந்தனர். அதன் பின்னர் பள்ளியின் மெயின் கேட் பூட்டப்பட்டு சோதனை தொடங்கியது. மாலையில் துவங்கிய இச்சோதனை இரவு வரை நீடித்தது. அதேபோல் தர்மபுரி, சென்னை தி.நகரில் டிஎன்சி நிதி நிறுவன அலுவலகங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 

 Expect many key executives to get caught

 

இதில் சிக்கிய பணம், ஆவணங்கள் குறித்து விவரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் முழுக்க முழுக்க சென்னையில் எந்தப் பணமும் சிக்கவில்லை. கிடைத்தது அனைத்தும் தர்மபுரியிலேயே சிக்கியுள்ளது. இந்த விசாரணையில் கிடைத்த தகவலை வைத்தே, அரூர் திருவிக நகர் பகுதியில் குமாருக்குச் சொந்தமான கே.கே.இல்லத்தை இரவு 11 மணியளவில் பறக்கும்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். 

 

 Expect many key executives to get caught

 

சோதனையின் போது அந்த வீட்டில் அமர்ந்திருந்த அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பசுபதி ‘எதற்காக இப்படிச் சுற்றி வளைத்துள்ளனர் என்று காட்டத்துடன்’ பேசினார். பின்னர் அவர், ‘வேண்டும் என்றால் வந்து சோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியபடி வந்து உடனடியாக வீட்டு ஜன்னல் வழியாகப் பணத்தை தூக்கி வீசியுள்ளார். ஜன்னல் வழியாக வீசிய 20 லட்சத்தைப் பிடித்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். மேலும் இவருக்குத் தொடர்புடைய கொலகம்பட்டியைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய உறுப்பினர் வீட்டிலும் சோதனை செய்தனர். அதேபோல் இளங்கோவன் சிட்பண்ட் நடத்திவரும் அவரது மெயின் அலுவலகமான டி.என்.சி. லாட்ஜ் கீழ் தளத்தில் 3 கோடியை, நள்ளிரவு 3 மணியளவில் பிடித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக 10 கோடி சிக்கிய நிலையிலும் மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பல முக்கிய நிர்வாகிகளும் இதில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

Next Story

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Drivers suing to confirm suffrage .. High Court closes case ..!


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

 

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.