Skip to main content

“எங்கள் கைகள் பூப்பறிக்குமா என்பது மிரட்டலா?” - காட்டமான அமைச்சர் சேகர்பாபு

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

Minister Shekhar Babu press meet about seeman

 

பேனா சிலையை வைத்தால் உடைப்பேன் என சீமான் சொன்னால் அதனை வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் கலைஞர் நினைவாக கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லாத பொழுது 81 கோடியில் பேனா சின்னம் தேவையா? அப்படி பேனா சின்னம் வைத்தால் அண்ணா அறிவாலயத்திலேயே அல்லது வேறு இடத்திலோ வைத்துக் கொள்ளுங்கள். மீறி கடலில் வைத்தால் உடைப்பேன்' எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்த கேள்விக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  “பேனாவை உடைத்தால் எங்கள் கை பூப்பறித்துக் கொண்டிருக்குமா?” எனப் பேசி இருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் மீண்டும் அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “அமைச்சர்கள் பொதுவெளியில் மிரட்டும் தொனியில் பேசுவதாக புகார்கள் எழுகிறதே?” என்ற கேள்விக்கு, “பேனாவை வைத்தால் உடைப்பேன் என்று சொன்னால் எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? நாங்கள் கம்முனு இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள? அவர் உடைக்கட்டும். அதை வரவேற்கிறோம் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்கள் கேட்கிற கேள்வியே அர்த்தமற்ற கேள்வி. அவர் அப்படி சொல்வார் அதற்கு நாங்கள் பதில் சொல்லாமல் கம்முனு இருக்க வேண்டுமா? அவர் உடைப்பேன் என்பது மிரட்டல் இல்லையாம். எங்கள் கைகள் பூப்பறிக்குமா எனச் சொல்வது தான் மிரட்டலா? எந்த வார்த்தை மென்மையானது, எந்த வார்த்தை கடுமையானது என்று உணராமல் கேள்விகளை எழுப்புவது நாகரீகமற்ற செயல்'' என்று காட்டமாகப் பதிலளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.