Advertisment

"குற்றச்சாட்டை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

minister senthilbalaji tweets against arappor iyakkam

சமீபத்தில் அறப்போர் இயக்கம், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்வது தொடர்பான டெண்டர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களைமுன் வைத்திருந்தது.

Advertisment

இந்நிலையில், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் இது சம்பந்தமாக, "மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது.

Advertisment

விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனப்பதிவிட்டுள்ளார்.

twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe