Skip to main content

 உள்ளரங்கில் ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

 


வேலூர் மக்களவை தொகுதியில்  அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து  அமைச்சர்கள்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

 

பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது,   ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட அமைப்பினருடன் ஆலோசனை நடத்துவதற்கு உரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டியது தானே?  உள்ளரங்கில் ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?    சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில்  ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.

 

r

 

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆம்பூரில் 2ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.  அப்போது,  நாகநாதசுவாமி கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு வாக்கு சேகரித்தார்.

 

d

 

இதில் கூட்டணியை சேர்ந்த காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆம்பூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் இதர முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று மதியம் அந்த மண்டபத்திற்கு வந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆம்பூர் தாசில்தாருமான சுஜாதா மற்றும் வருவாய்த்துறையினர், உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக கூறி மண்டபத்திற்கு சீல் வைத்தார்.

 

 தாசில்தார் சுஜாதா, இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதனால், தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூடியதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த், மண்டப உரிமையாளர் ஜக்கிரியா, ஹ்லசுன்னத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இதர நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

 

இந்நிலையில் இது குறித்து இன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  உள்ளரங்கில் ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தை விட்டு வெளியேற முடியாது; 45 நாட்களில் குற்றப்பத்திரிகை - ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் செக்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

'Can't leave Tamilnadu; Charge sheet in 45 days'-Rajendra Balaji again Sec

 

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

 

ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக எந்த இடத்திலும் குற்றச்சாட்டு இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றும், அவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்கள் சோடிக்கப்பட்டவை என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரக் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் வெளியூர்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்தனர்.

 

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில் தமிழகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 'தமிழ்நாட்டை விட்டு வெளியேற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அனுமதிக்க முடியாது. ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை எனவே நீண்ட காலம் வழங்க முடியாது' எனத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு 45 நாட்களில் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

 

 

Next Story

“தீபாவளி நேரத்தில் அச்சுறுத்துவதா?” - சாலை மறியலில் ஈடுபட்டு கைதான ராஜேந்திரபாலாஜி ஆதங்கம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Rajendra Balaji, arrested in sivakasi

 

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிவகாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.  

 

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதனால்,  எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது.  

 

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கறுப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Rajendra Balaji, arrested in sivakasi

 

சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக அதிமுக அமைப்புச் செயலாளரும்,  விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, திமுக அரசைக் கண்டித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து, சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  

 

Rajendra Balaji, arrested in sivakasi

 

கைதான ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் “அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை தேர்ந்தெடுத்தார்கள். இதனை அங்கீகரிக்காமல், கோரிக்கையை ஏற்காமல் ஜனநாயகப் படுகொலை செய்த திமுக ஆட்சியைக் கண்டித்து ஜனநாயக வழியில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று  அறிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை வலுக்கட்டயமாகக் கைது செய்துள்ளனர். அவர்களோடு சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக, சிவகாசியில் ஆர்ப்பாட்டமும் சாலை மறியல் போராட்டமும் நடத்தியிருக்கிறோம். 

 

இதன்மூலம் ஆளும் திமுக அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏதோ சர்வாதிகாரப் போக்கில், ஆணவப் போக்கில் ஆட்சி தங்களிடம் இருக்கிறது என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியை நசுக்கி விடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம். 50 ஆண்டுகள் பூர்த்தியாகி  பொன்விழா கொண்டாடி 51வது ஆண்டு தொடக்க விழாவை நாங்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இது திமுக தலைவருக்குப் பொறுக்கவில்லை. திட்டமிட்டு அதிமுக தொண்டர்களையும் தலைவர்களையும் நசுக்க வேண்டும் என தீபாவளி பண்டிகை வரும் நேரத்தில் அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்துள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயகப் பாதைக்கு இந்த அரசு திரும்பவேண்டும். மக்களின் விருப்பப்படி ஆட்சி நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளையும் மதிக்க வேண்டும்”  என்றார்.