Skip to main content

ஆக்சிஜன் சேமிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
Minister MRK Panneerselvam inspects Oxygen Storage Center

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆக்ஸிஜன் சேமிப்பு மையத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் ஏற்கனவே 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் இயங்கி கொண்டு வருகிறது என்றும் கூடுதலாக திங்கட்கிழமை 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு மையம் இயங்க உள்ளதாகவும் கூறினார்கள்.  இதனைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் கரோனா  பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் படுக்கையுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்தும்  அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது இந்த மருத்துவமனையில் கூடுதலாக ரூ30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள  6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்பு மையம் செயல்பட உள்ளது. அது செயல்பட்டால் 250 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் கடலூர் அரசு மருத்துவமனையிலும் 216 கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் ஆக்சிஜனுடன் கூடிய 600 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பதவியேற்ற ஒரு வாரத்தில் இருந்தே  கரோனாவை கட்டுபடுத்துவதற்கான தொடர்பணியை செய்து வருகிறது. அதனடிப்படையில் முதல்வர், அமைச்சர்களை தொகுதிக்கு சென்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது . இந்த அரசு கரோனாவிருந்து அனைவரையும் காப்பாற்றும் பொதுமக்கள் பயம் கொள்ளவேண்டாம்” என தெரிவித்தார்.

 

Minister MRK Panneerselvam inspects Oxygen Storage Center

 

இதேபோல் சிதம்பரம் அருகே உள்ள  சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கரோனா தொற்று நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது தொற்று ஏற்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு வரும்  நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என அங்குள்ள அலுவலர்களிடமும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். புதிய தொற்று ஏற்பட்டு வரும் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் உடனடியாக செய்து தர வேண்டும் என அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், அண்ணாமலைப்பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், மருத்துவகல்லூரி கண்காணிப்பாளர் நிர்மலா, சிதம்பரம் டிஎஸ்பி லாமேக்  உள்ளிட்டவருவாய்த்துறையினர், காவல் துறையினர், மருத்துவர்கள் என உடனிருந்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரம் தொகுதியில் ஆள் கிடைக்காததால் வேலூரில் இருந்து வேட்பாளரை இறக்கிய பாஜக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP dropped candidate from Vellore due to lack of candidates in Chidambaram constituency

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  இதில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி போட்டியிடுகிறார்.  அதே போல் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் சரியான ஆள் இல்லாததால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதபடுத்தி வந்தனர். சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பட்டியல் சமூகத்தில் சரியான ஆள் இல்லை என, வேலூரில் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினியை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.  இது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர். தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர்.

பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவ பொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும்,  உருவ பொம்மையை கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜகவில் சேர்ந்தார்.

பாஜகவுக்கு உள்ளூரில் ஒரு பட்டியலின வேட்பாளர் கிடைக்கவில்லை என   பாஜக தலைவர் அண்ணாமலையின் சிபாரிசால் வேலூர் தொகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார் என்றும் அதே நேரத்தில் சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய கடலூர். அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக பாடுபட்ட எவ்வளவோ உறுப்பினர்கள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் தமிழக பாஜக தலைமை ஏதோ கணக்கு போட்டு  அறிவித்துள்ளது.  இருப்பினும் தலைமையின் கணக்கு இங்கு செல்லாது என  கட்சியினர் மத்தியில் அரச புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்.