Skip to main content

நீங்கள் கோஷ்டி அரசியல் செய்வதற்கு எங்கள் ஊர்தான் கிடைத்ததா? பொதுமக்கள் கேள்வி

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
CV Shanmugam


விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் குடியநல்லூர் கிராமத்தில் ஏற்கனவே திறக்கபட்ட சேவை மைய கட்டிடத்தில் இன்று மாலை 4 மணியளவில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் திறப்பு விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
 

இந்த ஆரம்ப சுகாதார  நிலையமானது கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு முயற்சியால் கொண்டுவரபட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு மாவட்ட அமைச்சர் சிவி. சண்முகம், அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு எம்எலஏ, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காமராஜ் எம்பி ஆகியோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த விழாவில் தொகுதி எம்எல்ஏவிற்கு அழைப்புவிடுக்காமல் மாவட்ட நிர்வாகம் புறகணிக்கபட்டுள்ளது. 
 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற பல லட்சம் மதிப்பிலான கட்டிட திறப்பு விழா மற்றும் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள விருப்பம் காட்டாத அமைச்சர் இன்று நடக்கும் விழாவில் முக்கியத்துவம் காட்டுவது ஏன்? அவசியம் என்ன? என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 

இந்த அரசு விழாவில் தொகுதி எம்எல்ஏ பிரவு அழைக்கப்படவில்லை. அழைப்பிதழில் பெயர் போடவில்லை. எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் அழைப்பிதழில் பெயர் போடுவார்கள். அழைக்கப்படுவார்கள். ஆனால் இன்று திறப்பு விழா நடத்தும் கட்டிடம் முழுக்க முழுக்க எம்எல்ஏ பிரபுவால் கொண்டுவரப்பட்டது. அவரையே அழைக்காதது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

mla prabhu kallakurichi


 

இதுகுறித்து எம்எல்ஏ பிரபு கூறுகையில், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மாறுவார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் பொதுவாக இருந்து செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் அழைப்பிதழில் பெயர் போட்டியிருக்க வேண்டும், என்னை அழைத்திருக்க வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கட்டிடத்தை கொண்டு வந்ததே நான்தான். தொகுதி எம்எல்ஏவான நான் இந்த விழாவிற்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

அதிமுக எம்எல்ஏவான பிரபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாகவே அழைப்பிதழில் பிரபு பெயர் போடப்படவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 
 

நீங்கள் கோஷ்டி அரசியல் செய்வதற்கு எங்கள் ஊர்தான் கிடைத்ததா? விழாவை ரத்து செய்ய வேண்டும் என கட்சிக்கு அப்பார்பட்ட பொதுமக்கள் கூறுகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்? - இன்று வெளியாகும் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
By-elections to inform?-Notices released today

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து  ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று  பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியோடு சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி சாத்தியமா?' - அப்பாவு விளக்கம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'MLA post for Ponmudi'-Speaker Appa's explanation

சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளார்.

நெல்லையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு செய்தார். நேற்று உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனை காலத்தை பொறுத்து அவர்கள் வைக்கிற பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 

அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவருடைய பதவியைத் தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நாங்கள்தான் போட்டோம். இப்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். எவ்வாறு வழங்குவோம் என்றால் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரி இவர்களுக்கு எல்லாம் என்னென்ன நடைமுறை சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் பொன்முடிக்கும் பதவியை வாங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.