Skip to main content

பக்கத்து பக்கத்து பெஞ்சில உட்கார்ந்து வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்புட்ருக்கோம். இப்படி கேட்க வேண்டியதில்லையே ஜெயக்குமார்... எஸ்.வி.சேகர் பதில்

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

jayakumar s.ve.shekher

 

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ''அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  

 

அதற்கு ஜெயக்குமார், ''எஸ்.வி.சேகர் உண்மையிலேயே மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இவர் எந்தக் கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார் அ.தி.மு.க. கொடி. அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்ப கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன், இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்ப கொடுத்திட வேண்டும். இரண்டாவது, எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் வருகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

 

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகு எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். அதில், நான் என்ன சொன்னேன். தி.மு.க.வின் கொள்கைகளைப் போலவே அ.தி.மு.க. இருந்தால் அ.தி.மு.க. ஜெயிப்பது கடினம். அதனால் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நான் சொன்னேன். சொன்ன கருத்துக்கு ஏதோ பதில் சொல்வதாகக் கூறி, மான ரோஷம் இருந்தால் ஐந்து வருட பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்கிறார்.

 

நான் ஒரு பைசாக் கூட அ.தி.மு.க.வில் இருந்து வாங்கவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக இருந்து, நேர்மையாக உழைத்து, ஒரு பைசாக் கூட கமிசன் வாங்காமல் இருந்து, அரசு கொடுக்கக் கூடிய பணத்தை ஓய்வூதியமாக வாங்கிக்கொள்கிறேன். அதில் என்ன தப்பு இருக்கிறது. நான் எங்காவது ஒரு பைசா கமிசன் வாங்கியிருக்கிறேன் எனத் தெரியுமா? நாம எல்லோருமே பக்கத்து பக்கத்து பென்ஞ்சில உட்கார்ந்து வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்புட்ருக்கோம். அவ்ளோ விரோதியா என்னைப் பார்த்து வெட்கம், மானம், ரோசம் இருக்கான்னு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே ஜெயக்குமார்.

 

ஜெயக்குமார் உங்களை நான் நல்ல நண்பராகத்தான் பார்க்கிறேன். நான் சொன்னது, இந்த அ.தி.மு.க. தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்ட கருத்தே தவிர வேறு ஒன்றுமே கிடையாது. எப்போது தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை அ.தி.மு.க.வில் கடைப்பிடிக்க ஆரம்பித்தீர்களோ, எம்.ஜி.ஆர். எப்போ மூகாம்பிகை கோயிலுக்குப்போய் வைரவால் சாத்திட்டு வந்தாரோ, எப்போது ஜெயலலிதா எல்லா கோயிலுக்கும் போய் ஆமாம் நான் ஆன்மீகவாதி அப்படின்னு உரக்கச் சொன்னார்களோ, அப்பவே அறிஞர் அண்ணான்னு நீங்கள் கொண்டாடுகின்ற அண்ணா கொள்கையும், ஈ.வே.ரா. கொள்கையும் புதைக்கப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியும். ஆனால் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் என்னை சொந்தச் சகோதரனைப் போல என்னைப் பார்த்துக்கொண்டார். இவ்வாறு கூறியிருக்கிறார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.