ADVERTISEMENT
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 61வது வட்ட மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பாத்திமா முசப்பர் என்கிற பாத்திமா அஹமத்-க்காக எழும்பூர் புதுப்பேட்டை ஐந்து விளக்கு பகுதிகளில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் வாக்கு சேகரித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments