Skip to main content

“எதிர்க்கட்சியை திட்டித்தான் ஓட்டு கேட்க வேண்டிய அவசியமில்லை” - அமைச்சர் அன்பில் மகேஸ்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

Minister Anbil Mahes addressed the Trichy meeting

 

"எதிர்க்கட்சியை திட்டித்தான் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

 

திருச்சி மாவட்டம், வையம்பட்டி வடக்கு ஒன்றிய திமுகவின் சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் தவளவீரன்பட்டியில் ஒன்றிய செயலாளர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியபோது, “கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் நம் ஒவ்வொருவர் தலையிலும் கடனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அந்த நிதி பற்றாக்குறையை சரி செய்யும் பணியோடு அதே நேரத்தில் நிதி பற்றாக்குறை இருந்தாலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். எதிர்க்கட்சியை திட்டித்தான் நாம் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்து இருக்கின்றாரோ அதனை சொன்னாலே போதும். அதிகப்படியான வாக்குகளை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே நாம் ஒவ்வொருவரும் முதலமைச்சரின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் நமது முதல்வர். அதனால்தான் தேர்தல் என்று வரும்போது அனைவரையும் படிப்படியாக செதுக்கிக் கொண்டு செல்கின்றார். நமது இயக்கத்தை சேர்ந்துள்ள நமது கட்சிக்காரர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து தருவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் தமிழக முதல்வர் அறிவுறுத்தி வருகின்றார்.

 

அறிவாலயம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் அறிவாலயம் பக்கமே வராமல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க என்று சொல்லக்கூடிய ஏழைத் தொண்டன் இருந்து கொண்டுதான் இருக்கின்றான். அவனது தேவையை நிறைவேற்றுமாறு உத்தரவையும் வழங்கியுள்ளார். அதனை படிப்படியாக செய்து கொண்டுதான் இருக்கிறோம். உங்களது உழைப்பிற்கான நன்றிக்கடனை செலுத்த தயாராக உள்ளோம்” என்றார். கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன் மற்றும் திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.