Skip to main content

’இதனுள்ளிருக்கும் நுண்ணரசியல் மிக மிக ஆபத்தானது’ - சீமான்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

see


சென்னை - கள்ளிக்குப்பம் பகுதியில் குடியிருப்புகளை அகற்றும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை, அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியிலுள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர், எஸ்.எஸ்.நகர், அந்தோணி நகர் உள்ளிட்டப் பகுதியிலுள்ள 1,000 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிலைபெற்று வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கிருக்கும் 5,89 வீடுகள் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதனை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்கிற பெயரில் பொத்தாம் பொதுவாக இவ்விவகாரத்தை அணுகினால் இது ஏரியைக் காப்பதற்கான மிகச்சிறந்த நடவடிக்கை போலத் தோன்றலாம். ஆனால், இதனுள்ளிருக்கும் நுண்ணரசியல் மிக மிக ஆபத்தானது. ஆக்கிரமிப்புகள் என்கிறபோது வெறும் சேரிகளையும், குப்பங்களை நினைவுக்குக் கொண்டு வருகிற பெரும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். ஆளும் வர்க்கத்தினருக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றமென்றால் குடிசைகளை இடிப்பது மட்டும்தானா? வணிக வளாகங்களும், கல்லூரி நிலையங்களும் ஏன் அதில் வருவதில்லை? என்கிறக் கேள்வியை எவரும் கேட்கத் துணிவதில்லை. நீதிமன்ற ஆணையினால் தான் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிறார்கள். ஆனால் பல நீதிமன்றங்களே நீர்நிலைகளை ஆக்கிரமித்து எழுப்பப்பட்டிருக்கிறது. அப்படி கட்டப்பட்ட நீதிமன்றங்களை எப்பொழுது அகற்ற உத்தரவிடப்போகிறார்கள்?

 

 

e

 

சென்னை மாநகரம் முழுக்க எத்தனையோ வணிக வளாகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும், பெரும் கட்டிடங்களும் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் எத்தனை விழுக்காட்டைத் தனது சீரிய நடவடிக்கையின் மூலமாக அரசு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது? தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே அடிப்படைக் கட்டமைப்பு இன்றுவரை அமைக்கப்படவில்லை. காரணம், சென்னை நகருக்குள் செய்யப்பட்டிருக்கிற மிதமிஞ்சிய ஆக்கிரமிப்புகள். அதன்விளைவாகவே, கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் சென்னையைக் கபளீகரம் செய்தது. அது இயற்கையின் சீற்றத்தினாலோ, தனிமனிதத் தவறுகளாலோ நடந்ததல்ல! அரசாங்கத்தின் நிர்வாக முறையில் நிகழ்ந்தப் பெரும்பிழையினாலே நேரிட்டது. அதன்பிறகும், அத்தவறுகளில் இருந்து பாடம் கற்கவோ, சென்னையின் கட்டமைப்பை மறுஉருவாக்கம் செய்யவோ எவ்வித முயற்சியையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், மண்ணின் மக்களை மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்கிற பெயரில் சென்னையைவிட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே, சென்னையின் ஆதிக்குடிகளை அவர்களின் வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் கள்ளிக்குட்டையிலும், செம்மஞ்சேரியிலும், கண்ணகி நகரிலும் கொண்டுபோய் அடைத்துவிட்டார்கள். அவர்கள் வாழ்வாதாரமிழந்து தினக்கூலிகளாக இன்றைக்கு அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

 

அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் 25 ஆண்டுகளாக அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற அரசாங்கம், அவர்களுக்கு குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, குடும்ப அட்டை, வாக்களர் அடையாள அட்டை போன்றவற்றையெல்லாம் ஏன் வழங்கியது? அவர்களிடம் வரி எப்படி வசூலித்தது? மாறி மாறி ஆண்டு அதிகாரத்தைச் சுவைத்த இரு திராவிடக் கட்சிகளுக்கும், ஆக்கிரமிப்பு செய்தது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என அப்போது தெரியாதா? இவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதைக் கண்டறிந்து நடவடிக்கையெடுக்க 25 ஆண்டுகளானதா? கள்ளிக்குப்பம் குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இவ்வளவு முனைப்புக் காட்டுகிற தமிழகப் பொதுப்பணித்துறையினர், அரசு இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக இடத்தை இதுவரை மீட்காதது ஏன்? அரசு நிலங்களைத் திருப்பித் தந்து, அக்டோபர் 3-ம் தேதிக்குள் நிலத்தை விட்டு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியேற வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இதில் சிறைத்துறைக்குச் சொந்தமான 58.17 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து, அதில் 28 கட்டிடங்களை கட்டியெழுப்பியிருக்கிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். நீதிமன்ற உத்தரவை மதியாது தான்தோன்றித்தனமாகச் செயல்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழத்தின் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் பொதுப்பணித்துறைதான், கள்ளிக்குப்பம் பகுதியில் வீடுகளை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது என்பது நகைமுரணில்லையா?

 

கள்ளிக்குப்பம் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளையும், உரிய வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தி, அவர்களைக் குடியமர்த்திவிட்டு இதனைச் செய்திருந்தால்கூட ஏற்புடையதாக இருந்திருக்கும். அதனைவிடுத்து, திடீரென அவர்களை வெளியேற்றி எதேச்சதிகாரப்போக்கோடு கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் வீடுகளை இடிக்க உத்தரவிட்டிருக்கும் தமிழக அரசின் செயலானது ஏற்புடையதல்ல! எனவே, அம்மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வீடுகளை இடிக்கும் உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்