Advertisment

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்திலும், குறிப்பாக சென்னையிலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்பினரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னை பாரி முனை பகுதியில் உள்ள குறளகத்தில் இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் இயக்குனர் கவுதமன் கலந்துகொண்டார்.