Skip to main content

சுபிக்‌ஷா இயக்குனர் ஜாமீன்கோரி மனு தாக்கல்

Published on 08/03/2018 | Edited on 08/03/2018
subisha

 

வங்கி மோசடி வழக்கில் சுபிக்‌ஷா இயக்குனர் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

 

குஜராத், டெல்லி,  தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்பிரமணியன் இருந்துள்ளார்.   இவர் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில், சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில்  சுப்பிரமணியனை  மத்திய அமலாக்க துறையினர் கைது செய்தனர். 

 

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை வியாழன்று (மார்ச் 8) விசாரிக்க நீதிபதி சுபா தேவி வழக்கை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புரூஸ் லீயின் மரணத்திற்குக் காரணம் இதுவா? - 49 ஆண்டுகளுக்குப் பின் வெளியான ரகசியம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Action King Bruce Lee's - Answers After 49 Years

 

உலக அளவில் 20ம் நூற்றாண்டில் 'அதிரடி' என்ற வார்த்தையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் புரூஸ் லீ. தற்காப்புக் கலைஞர், இயக்குநர், நடிகர், தத்துவவாதி எனப் பன்முகம் கொண்டவர். 1940ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த புரூஸ் லீ சீனர் என்றாலும் அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் அடையாளமாக மாறிய அதிசயத்துக்குரியவர். இவரிடம் சண்டையிட்டுக் காயமடையாமல் யாரும் சென்றதில்லை எனக் கூறும் அளவிற்கு  குங்ஃபூ கலையில்  வல்லவர்.

 

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட புரூஸ் லீ, 1973 ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதி தனது 32 ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் உலக இளைஞர்களை ஆழ்ந்த சோகத்திற்குள்ளாக்கியது. புரூஸ் லீயின் உயிரிழப்பு தொடர்பாகத் தற்பொழுது வரை பல சர்ச்சைகள் கொட்டிக் கிடக்கிறது. பலமுறை அவரைக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டாலும் அவரை விஷத்தாலோ, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதத்தாலோ அவரைக் கொல்ல முடியவில்லை என 80ஸ், 90 ஸ் கிட்ஸ்கள் சொல்லும் கதைகள் இன்றளவும் நீடிக்கிறது.

 

இன்றளவும் அவரது மரணம் என்பது எந்தத் தெளிவான தகவலும் இல்லாத ரகசியமாகவே  நீடித்து வருகிறது. புரூஸ் லீ பெருமூளை வீக்கம் என்னும் நோயினால் மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது. இந்த பெருமூளை வீக்கம் ( Cerebral Edema) என்ற பிரச்சனை காரணமாக அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி ஒருமுறை தலைவலி ஏற்பட்ட பொழுது நடிகை பெட்டி டிங் பீ வலி நிவாரணி மருந்து ஒன்றைக் கொடுத்துள்ளார். அன்று மாலை அந்த மருந்து எடுத்துக் கொண்ட புரூஸ் லீ அதன் பிறகு எழுந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் நடிகை கொடுத்த வலி நிவாரணி மருந்தினால் மூளை வீக்கம் ஏற்பட்டு அவர் இறந்ததாக மருத்துவர்கள் நம்பினர். ஆனால் தற்பொழுது 'கிளினிக்கல் கிட்னி ஜெர்னல்' (Clinical Kidney Journal) என்ற ஒரு ஆய்வு நிறுவனம் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் அதிக தண்ணீர் குடிப்பதை புரூஸ் லீ வாடிக்கையாக வைத்திருந்ததால் அதன் காரணமாக அவர் இறந்து போய் இருக்கலாம் என்ற முடிவைத் தெரிவித்துள்ளது. அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் அவர் இறந்ததாக அந்நிறுவன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 


 

Next Story

வன்முறை காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் வேண்டும் எனக் கோரி மனு-எச்சரித்து தள்ளுபடி செய்த நீதிபதிகள்

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

highcourt chennai

 

திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் வரும்போது அதில் வரும் ஆயுதங்கள், இரத்தம் போன்றவை போலியானவை என்பதை அறிவுறுத்த எச்சரிக்கை வாசகங்கள் வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சினிமா சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் ஆயுதங்கள், இரத்தம் போன்றவை போலியானவையே. இருப்பினும் அவை பார்வையாளருக்குத் தத்ரூபமாக உண்மைபோலவே காட்டப்படுகிறது. இந்த நிலையில் அதிகம் ஆக்சன் நிறைந்த திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகள், அதில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், ரத்தங்கள் உள்ளிட்டவற்றை காணும் இளைஞர்கள் அதேபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும், எனவே வன்முறை காட்சிகளின் பொழுது காட்டப்படும் ஆயுதங்கள் பேப்பரால் செய்த போலி எனவும், இரத்தங்கள் காட்டப்படும் பொழுது அவை ரத்தமல்ல கலர் பவுடர் எனவும் எச்சரிக்கை வாசகம் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர். வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் கோரிக்கை வைத்த நிலையில் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.