style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் கட்டப்படவிருக்கும் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்த விழாவில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நவாஸ்கனி எம்.பி, உள்பட பல அமைச்சர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.