Skip to main content

''நானும் சசிகலா புஷ்பாவும் ஒரே கேரக்டர்; பதிலடி தருவேன்'' - காயத்ரி ரகுராம் ஆவேசம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 "Me and Sasikala Pushpa are the same character; I will retaliate'' - Gayathri Raghuram raves

 

இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றியும் யூடியூப் சேனல்களில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்தக் காணொளியைக் காணும் மக்களுக்கு இது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் கட்சியின் எண்ண ஓட்டம் இதுதான் எங்கிற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்துச் சென்றுவிடுகிறது'' எனக் கூறியிருந்தார்.

 

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் வகித்துவரும் பொறுப்புகளிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 "Me and Sasikala Pushpa are the same character; I will retaliate'' - Gayathri Raghuram raves

 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் உண்மையைப் பேசினதுக்காக மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எதுவும் இல்லை. நான் உண்மையைப் பேசி இருந்தேன். என்னைப் பற்றி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்பொழுது அதற்குப் பதில் சொல்லும் கடமை இருக்கிறது. பாஜக நிர்வாகி செல்வகுமார் என்ற ஒருவர் கொச்சையான டிவிட்டர் பதிவை லைக் செய்துள்ளார். பலமுறை எனக்கு அவரிடமிருந்து கால்கள் வந்தது. அதற்கு நேரடியாக நான் பதிலடி கொடுத்தேன். பதிலடி கொடுத்ததற்காக நீக்கப்பட்டுள்ளேன். தனிநபர் சார்ந்து அது திமுக காரராக இருக்கட்டும், விசிக காரராக இருக்கட்டும், பாஜக காரராக கூட இருக்கட்டும் யார் தாக்கினாலும் அவர்களுக்குத் திரும்ப பதிலடி கொடுக்கத்தான் செய்வேன். இது என்னுடைய உரிமை. இந்த சுதந்திரத்தை முடக்குவது என்பது வருத்தமாக இருக்கிறது. அதுவும் கட்சிக்குக் களங்கம் விளைவித்தேன் என்று சொல்லி என்னை சஸ்பெண்ட் செய்திருப்பது மன வருத்தத்தைத் தருகிறது. மன உளைச்சலையும் தருகிறது.

 

எட்டு வருடமாக இந்தக் கட்சிக்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சினிமா பணிகள், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கட்டும் எதுவுமே இல்லாமல் நான் பாஜகவிற்காக, நாட்டிற்காக ஐந்து பைசா கூட வாங்காமல் என்னுடைய சொந்த காசில் அல்லது கடன் வாங்கியாவது மத்தவங்களுக்கு உதவி செய்துகொண்டு வந்திருக்கிறேன். அதற்கு நிறைய உதாரணம் இருக்கிறது; உண்மையும் இருக்கிறது. அதற்கு சாட்சியம் இருக்கிறார்கள். கரோனா காலகட்டத்திலும் சரி, இப்பொழுதும் சரி மக்களுக்காக நான் நிறைய செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் ஃபேமிலிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாருக்காக இருந்தாலும் சரி. நடனக் கலைஞர்களுக்குக் கூட உதவிகள் எல்லாம் பண்ணி இருக்கிறோம்.

 

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழர் பிரிவில் பணியாற்றி இதுவரை நான் வெளிநாட்டிலிருந்து 28 பேரை இங்குப் பத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறேன். மியான்மர், கம்போடியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிறைய பேரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை என்னுடைய சொந்த செலவில் கூட நான் செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது நான் பாஜகவிற்கு களங்கத்தைக் கொண்டு வந்தேன் என்று சொல்வது ரொம்ப வருத்தத்தைத் தருகிறது. செல்வகுமார் என்ற நபர் அதுவும் கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு முன்புதான் பாஜகவில் சேர்ந்த நபர் வந்த உடனே கட்சியில் பெரிய பொறுப்பை வாங்கி இன்னைக்கு அவர் எனக்கு எதிராக, கொச்சையான டிவிட்டுட்டு லைக் போட்டிருக்கிறார். அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்கமாட்டேன். நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன். என்னை யாராவது தாக்கினார்கள் என்றால் திருப்பி அடிக்கிற கேரக்டர். சசிகலா புஷ்பாவும் அப்படித்தான் திருப்பி அடிக்கிற கேரக்டர். இதுக்கும் கட்சி களங்கத்திற்கும் சம்பந்தமே கிடையாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.