தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிம.தி.மு.க சார்பில் இன்று (20.06.2023) தொடங்கி ஜூலை மாதம் 20 ஆம் தேதி வரை பொதுமக்களிடம் கையெழுத்துபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியை இன்று காலை 12 மணிக்கு மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் ம.தி.மு.கபொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்கள் முதல் கையெழுத்திட்டார்.ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களும் உடன் இருந்தார்.