இன்று (06.05.2021) சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் 28ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர், முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அக்கட்சியின் கொடியை ஏற்றிவைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.