Skip to main content

மேயர் தேர்தல் எப்போது? அமைச்சரவையில் விவாதம் !

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

 

 

மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியால் தேர்தலை நடத்த முன் வந்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதன்படி, 27 மாவட்டங்களுக்கு மட்டும் கடந்த வருடம் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்தினர். இன்னும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

 

eps



              

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்ட சூழலில், அதனை எப்படி நடத்தலாம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார் எடப்பாடி. 
 

அப்போது, ஊரக உள்ளாட்சிகளான கிராம பஞ்சாயத்துகளுக்கு மட்டும் முதலில் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்து விடலாம். அதன்பிறகு சிறிய இடைவெளி விட்டு, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தலை நடத்தலாம். மீண்டும் சிறிய இடைவெளிவிட்டு மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலை நடத்துவோம் என யோசனை தெரிவித்திருந்தார் வேலுமணி. 

 

இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, மூத்த அமைச்சர்களுடன் நடத்திய விவாதத்தில், ‘ இது நல்ல யோசனைதான் ‘ என தெரிவித்திருந்தனர். 



அதன்படியே, கிராம பஞ்சாயத்துகளுக்கு முதலில் தேர்தலை நடத்தியது எடப்பாடி அரசு. பல்வேறு பிரச்சனைகளையும், விதிகளையும் சுட்டிக்காட்டி திமுக தொடர்ந்த வழக்கால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த சூழலில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இதற்கான தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு. 


   

கடந்த 4-ந்தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தலை நடத்துவதா? அல்லது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துவதா ? என அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்துள்ளது. அந்த ஆலோசனையின் முடிவில், 9 மாவட்டங்களுக்கான தேர்தலோடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தலாம் எனவும், துவக்கத்தில் முடிவு செய்திருந்தபடி இடைவெளி விட்டு தேர்தலை நடத்துவதை தவிர்க்கலாம் எனவும் அமைச்சர் வேலுமணி துவங்கி  அனைத்து அமைச்சர்களும் தெரிவித்திருக்கிறார்கள். 
 

இதனையடுத்து, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒட்டுமொத்த தேர்தலையும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த ஒட்டுமொத்த தேர்தலையும் இரண்டு கட்டங்களாக நடத்தவும் தீர்மானித்துள்ளனர். இந்த தேர்தலை நடத்துவதற்காகத்தான் மார்ச்சுக்குள் பட்ஜெட் கூட்டத்தை முழுமையாக முடிக்க முடிவு செய்திருக்கிறது எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ! 
            

 இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை முழுமையாக எதிர்கொள்ள மாவட்டவாரியாக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது அதிமுக தலைமை!


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story

'இந்த வழியில்தான் தேர்தலை நடத்துவீர்களா?' - உச்சநீதிமன்றம் கடும் காட்டம்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
'Will you conduct the election in this way?' The Supreme Court is strict

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தவை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 30-01-24 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டியது. இந்த நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.

தேர்தலை நடத்தும் விதம் இதுதானா? என சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேர்தல் என்ற பெயரில் அங்கு நடந்த செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல். வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதைப் பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம். தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து சண்டிகர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.