Skip to main content

பல கோடி ரூபாய் மோசடி - நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன? அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி தலையீடு காரணமா? பால் மு.ச. கேள்வி

Published on 09/06/2020 | Edited on 09/06/2020
rajendra balaji sellur raju




ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பலகோடி ரூபாய் மோசடி உறுதியான பிறகும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் அவர்கள் என்பதால்தான் என்கிறது ஆவின் வட்டார தகவல். மேலும் அமைச்சர்கள் தலையீடு காரணமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கு, குறைந்த வட்டியில் நீண்ட கால, குறுகிய கால கடன்கள் வழங்கவும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சிக்கனமாக சேமிக்கும் பழக்கத்தையும் உருவாக்கிடும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது "மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கம்". இது போன்றே மத்திய - மாநில அரசுகளின் எல்லா துறைகளுக்கும் தனித்தனியாக கூட்டுறவு நாணயச் சங்கங்கள் உண்டு. இவை அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கும்.

இச்சங்கங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று, நிர்வாகச் செலவுகளுக்கு இரண்டு சதவிகித கூடுதல் வட்டி நிர்ணயித்து, சங்க உறுப்பினர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால கடன் வழங்கிடும்.

அவ்வாறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தைவிட குறைவான வட்டியில், பி கிளாஸ் அங்கத்தினர்கள் மூலம் நீண்ட கால வைப்புத் தொகை பெற்று சங்கத்தின் இலாபத்தை இரட்டிப்பாக்கி கொள்ளும். இதுபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள சங்கங்கள் பெருமளவு நிரந்தர வைப்புத் தொகைகளை பெற்று சுயசார்பில் (பிரதமர் மோடிக்கு பிடித்தமான சொல்) நல்ல இலாப நோக்கத்தில் செயல்பட்டு வந்தன. 

 

 


கூட்டுறவு துறை அமைச்சராக செல்லூர் ராஜு வந்தவுடன் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சிக்கன மற்றும்  நாணய சங்கங்களில் பல்வேறு முறைகேடுகளுக்கு இராஜப்பாட்டை விரிக்கப்பட்டது. அப்படி முறைகேடுகள் நடந்த சங்கங்களில், ஒரு கின்னஸ் சாதனைப்போல், ரூபாய் 7,92,41,616/ (சுமார் 8கோடி ரூபாய்) என்றளவுக்கு கையாடல்  நடந்துள்ளது.

சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட பாரம்பரியமிக்க "மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கமான இந்த கூட்டுறவு சங்கத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத் தொகையை குருவி சேர்ப்பது போல் சிறுக, சிறுக சேமித்து வைத்து வந்த நிலையில் அச்சங்கத்தின் தலைவர் பாண்டி மற்றும் உபதலைவர் பரமானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து ஓய்வுபெற்ற ஊழியர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து மேற்கண்ட தொகையை முறைகேடாக கையாடல் செய்துள்ள விசயத்தை கடந்த 2017-2018ம் நிதியாண்டிற்கான கணக்குகள் தணிக்கை செய்யும் அதிகாரிகள் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளதோடு அந்த தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமலும், அவர்கள் கையாடல் செய்த பணத்தைத் திருப்பி வசூலிக்காமலும் ஆவின் நிர்வாகமும், கூட்டுறவு துறையும் அமைதி காப்பது அதிர்ச்சியளிக்கிறது.


 

nakkheeran app




மேலும் மதுரை ஆவின் தொழிற்சங்க மாவட்ட தலைவராக இருக்கும் பாண்டி, மற்றும் பரமானந்தம் ஆகியோர் ஏற்கெனவே மதுரை ஆவினில் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் குற்றச்சாட்டும் நிலுவையில் உள்ள நிலையில் மதுரை பால் பண்ணை சிக்கன நாணய சங்கத்தில் சுமார் 8கோடி ரூபாய் வரை கையாடல் செய்தது உறுதியான பிறகும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்பதால்தான் என்கிறது ஆவின் வட்டார தகவல்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், வழக்கு எண் 1340/2020 மாண்புமிகு நீதியரசர் புஷ்பா சத்யநாராயணா அவர்கள் அமர்வில் கடந்த 27.02.2020 அன்று வந்த போது, கடுமையான அதிருப்தியை தெரிவிக்க, குற்றங்களை ஒப்புக்கொண்டு, "மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தின் சார்பில் அரசு ப்ளீடர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதியரசர் ரிசர்வ் வங்கியையும் எதிர்மனுதாரராக சுயோ மோட்டோ அடிப்படையில் இணைத்து வழக்கை 13.03.2020 க்கு ஒத்தி வைத்திருந்தார். வழக்கு கொரோனாவால் மீண்டும் எடுக்கப்படாமல் இருப்பதால் அன்றைய தினமே மதுரை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சங்கத்தின் முறைகேட்டை உறுதி செய்து, கூட்டுறவுச் சட்ட விதிகளின் படி அவரின் செயல்முறை ஆணைகள் கடித எண் ந.க 1228/2019 சட்டப்பணிகள் நாள் 27.02.2020 தண்டத்தீர்வைக்கு உத்தரவிட்டு, வணிக குற்றப் புலனாய்வு பிரிவிக்கும் புகார் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற முதுநிலைப் பணியாளர் சிதம்பரம் என்பவர் தனது முதலீடு மோசடியானதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மிகுந்த நோய்வாய்ப்பட்டு மருந்து கூட வாங்க முடியாத நிலையில் மரணம் அடைந்த வேதனை நிறைந்த சோகமான சம்பவமும் நடந்துள்ளது. இவ்வளவு விவகாரங்கள் நடந்து, அவை முதல்வர் அலுவலகம் வரை புகார் சென்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் அவர்களுக்கும், தொடர்புடைய கூட்டுறவு அமைப்பின் உயர் அலுவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்து முறையிட்டும் இதுவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல், குற்றம் செய்தவர்கள் அமைச்சர்களின் ஆதரவோடு தைரியமாக உலா வந்து கொண்டிருப்பது சட்டத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் தவறு செய்தவர்களை கைது செய்யவும், அவர்கள் கையாடல் செய்த சுமார் 8கோடி ரூபாய் பணத்தை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

''வைட்டமின் டி வேணாமா? வெயிலுக்கு வாங்க...''-செல்லூர் ராஜு கலகலப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 "Don't you want vitamin D.. to get sun..."-Sellur Raju Kalakalappu

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர், வெயிலுக்காக பயந்து ஓரமாக நின்றிருந்த கட்சி நிர்வாகிகளைப் பார்த்துப் பேசுகையில், ''நாங்க எல்லாம் வெயிலில் இருக்கிறோம். நீங்கள் மட்டும் நிழலில் இருக்கலாமா... இதெல்லாம் நியாயமாப்பா... வாங்கப்பா உடம்புக்கு வெயில் நல்லதுமா. இந்த நேரத்துல வைட்டமின் டி கூடும். என்ன டாக்டர் ''எனச் சொல்ல, அருகில் இருந்த சரவணன் தலையை ஆட்டினார். அதன் பிறகு பேசிய செல்லூர் ராஜு, 'எம்.எஸ் படிச்ச டாக்டரே சொல்லிவிட்டார் வாங்க வெயிலுக்கு'' என்றார்.

அதே பரப்புரை கூட்டத்தில் கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால் அதுவரை நடனமாடுங்கள் எனச் செல்லூர் ராஜு சொல்லிவிட்டார். உடனே 'கள்ளழகர் வாராரு' பாடல் போடப்பட்டது. அங்கிருந்த பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.