Skip to main content

படத்தில் தன்னை ஹீரோவாக நினைப்பதுபோல நிஜத்தில் மோடியை நினைக்கிறார் - ரஜினி குறித்து மனுஷ்யபுத்திரன்

Published on 13/11/2018 | Edited on 13/11/2018
​rajini



சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவரிடம், பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால்  யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார்.

 
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,
 

மோடியின் பலம் என்பது தொடர்ந்து மிகைப்படுத்தி காட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரைக்கும் 1989க்கு பிறகு தொடர்ந்து கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. இதற்கு பாஜகவும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவின் அரசியல் என்பதே கூட்டாட்சியை நோக்கி சென்றுவிட்டது. 
 

எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்தபோதும் கூட பாஜக தனித்து வெற்றிப்பெறவில்லை. அதிலும் பலபேர் கூட்டணியில் இருந்தனர். வடமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கூட்டணி வைத்திருந்தனர். மத்தியில் ஆளும் பாஜக, மோடி என்கிற தனிநபரால் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. 
 

அப்படி இருக்கும்போது மோடியை பலசாலியாக ரஜினி புரிந்துகொண்டிருக்கிறார். கடந்த தேர்தலின்போது பாஜக 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றது. அப்படிப்பார்த்தால் 3ல் ஒரு பங்குதான் பாஜகவுக்கு இருந்தது. எதிர்க்கட்சிகள் சிதறி கிடந்தபோது, கூட்டணி வைத்துத்தான் இந்த வாக்குகளை பாஜக பெற்றது. 
 

இந்தியாவைப் பொறுத்தவரை எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதுதான் எதார்த்தம். அப்படியிருக்கும்போது அவரை தனிப்பெரும் சக்தியாக மிகைப்படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

Manushyaputhiran

 

பாராளுமன்றத்தில் 400 இடங்களை வைத்திருந்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செலுத்தியது. 67க்கு பிறகு இவை மாறுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைகிறது. இந்தியாவையே ஆண்ட கட்சி காங்கிரஸ் இன்று பல்வேறு வகைகளில் பலவீனம் அடைந்திருப்பதை பார்க்கிறோம். ஒரே ஒரு முறை தனித்து ஆட்சி அமைத்ததற்காக அவரை வெல்லவே முடியாத சக்திபோல் நம்புவது மிகவும் கேலிக்கூத்தானது.
 

நாடு முழுக்க இன்று பாஜகவுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அவர்கள் கையில் வைத்திருந்த பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள். பாஜகவின், மோடியின் சக்தியை ஊதி பெருக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் நரேந்திர மோடியின் செல்வாக்கு நாடு முழுக்க சரிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் மோடி ஒரு தனி மனிதர் போன்றும், ஏதோ சிறுவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு அவரை எதிர்ப்பது போன்று ரஜினி நம்புவது வேடிக்கையாக உள்ளது. 
 

படங்களில் நடிக்கும் சண்டைக்காட்சிகளில் எல்லோரையும் அடித்து போடுகிற ஒரு ஹீரோவாக தன்னை காட்டிக்கொள்வதுபோல, மோடியையும் நம்புகிறாரோ என்று தோன்றுகிறது. திரைப்படத்தில் வருவதும் சித்தரிக்கப்பட்டது. மோடியின் தனிபெரும் ஆற்றல், செல்வாக்கு என்பதும் சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.