Skip to main content

படத்தில் தன்னை ஹீரோவாக நினைப்பதுபோல நிஜத்தில் மோடியை நினைக்கிறார் - ரஜினி குறித்து மனுஷ்யபுத்திரன்

Published on 13/11/2018 | Edited on 13/11/2018
​rajini



சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவரிடம், பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால்  யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார்.

 
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,
 

மோடியின் பலம் என்பது தொடர்ந்து மிகைப்படுத்தி காட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரைக்கும் 1989க்கு பிறகு தொடர்ந்து கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. இதற்கு பாஜகவும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவின் அரசியல் என்பதே கூட்டாட்சியை நோக்கி சென்றுவிட்டது. 
 

எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்தபோதும் கூட பாஜக தனித்து வெற்றிப்பெறவில்லை. அதிலும் பலபேர் கூட்டணியில் இருந்தனர். வடமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கூட்டணி வைத்திருந்தனர். மத்தியில் ஆளும் பாஜக, மோடி என்கிற தனிநபரால் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. 
 

அப்படி இருக்கும்போது மோடியை பலசாலியாக ரஜினி புரிந்துகொண்டிருக்கிறார். கடந்த தேர்தலின்போது பாஜக 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றது. அப்படிப்பார்த்தால் 3ல் ஒரு பங்குதான் பாஜகவுக்கு இருந்தது. எதிர்க்கட்சிகள் சிதறி கிடந்தபோது, கூட்டணி வைத்துத்தான் இந்த வாக்குகளை பாஜக பெற்றது. 
 

இந்தியாவைப் பொறுத்தவரை எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதுதான் எதார்த்தம். அப்படியிருக்கும்போது அவரை தனிப்பெரும் சக்தியாக மிகைப்படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

Manushyaputhiran

 

பாராளுமன்றத்தில் 400 இடங்களை வைத்திருந்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செலுத்தியது. 67க்கு பிறகு இவை மாறுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைகிறது. இந்தியாவையே ஆண்ட கட்சி காங்கிரஸ் இன்று பல்வேறு வகைகளில் பலவீனம் அடைந்திருப்பதை பார்க்கிறோம். ஒரே ஒரு முறை தனித்து ஆட்சி அமைத்ததற்காக அவரை வெல்லவே முடியாத சக்திபோல் நம்புவது மிகவும் கேலிக்கூத்தானது.
 

நாடு முழுக்க இன்று பாஜகவுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அவர்கள் கையில் வைத்திருந்த பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள். பாஜகவின், மோடியின் சக்தியை ஊதி பெருக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் நரேந்திர மோடியின் செல்வாக்கு நாடு முழுக்க சரிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் மோடி ஒரு தனி மனிதர் போன்றும், ஏதோ சிறுவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு அவரை எதிர்ப்பது போன்று ரஜினி நம்புவது வேடிக்கையாக உள்ளது. 
 

படங்களில் நடிக்கும் சண்டைக்காட்சிகளில் எல்லோரையும் அடித்து போடுகிற ஒரு ஹீரோவாக தன்னை காட்டிக்கொள்வதுபோல, மோடியையும் நம்புகிறாரோ என்று தோன்றுகிறது. திரைப்படத்தில் வருவதும் சித்தரிக்கப்பட்டது. மோடியின் தனிபெரும் ஆற்றல், செல்வாக்கு என்பதும் சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார்.