Skip to main content

மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்கள்! கருப்புகொடி போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி!  

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
kunangudi R.M Haniba - Manithaneya Makkal Katchi

 

 

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டங்களை எதிர்த்து இன்று (27-ந் தேதி) நாடு முழுவதும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருக்கின்றன.

 

இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததுடன் மனித நேய மக்கள் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவித்திருந்தார் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா! அதன்படி தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியிருக்கிறார்கள் மனிதநேய மக்கள் கட்சியினர்.

 

தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தின் காரணங்களை வலியுறுத்தி பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபாவிடம் நாம் பேசியபோது, “கரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது மத்திய பாஜக அரசு.

 

மின்சார திருத்த சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. இந்த சட்டங்கள் அனைத்துமே மக்களுக்கு விரோதமானவை, இவைகள் கண்டிக்கப்பட வேண்டிய சட்டங்கள். இவைகளை எதிர்த்துதான் கருப்பு கொடி போராட்டம் நடக்கிறது.

 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் அறிவுறுத்தலின்படி, போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறோம். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புகளிலிருந்து நாம் விலகி போனால் நாடு சுடுகாடாகி விடும். மத்திய பாஜக அரசு கொண்டு வரும் இத்தகைய கருப்பு சட்டங்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய கடமை ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. அதனால்தான், இந்த சட்டங்களை எதிர்த்து மனிதநேய கட்சி கருப்பு கொடி ஏற்றி போராடுகிறது” என்கிறார் ஆவேசமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.