ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து மம்தா பானர்ஜி போராட்ட அறிவிப்பு

03:17 PM Mar 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜியின் அரசுக்கு எதிராக அம்மாநில ஆளுநர் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு உரிய காலத்தில் அனுமதி கொடுப்பதில்லை. பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வது போன்ற மாநில அரசுக்கு எதிரான நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. மேலும், மேற்கு வங்கத்திற்கு என பட்ஜெட்டின் போது எதுவும் ஒதுக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து வரும் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT