Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணியா? சீமான் பதில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 2019 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அந்த சின்னத்தை அறிமுகம் செய்தார்.

Advertisment

seeman

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் அதுபோன்று கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.

Advertisment

மயிலை மாங்கொல்லையில் 23-ந் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. நான் 25-ந்தேதி முதல் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளேன் என்றார்.

Makkal needhi maiam Naam Tamilar Katchi Kamal Haasan seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe