Advertisment

மக்கள் நீதி மய்யம் எதிர்காலம் எப்படி இருக்கும்? கமலை சந்தித்த பின்னர் அமீர் பதில்

ameer

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமீர்,

நான் கலந்து கொண்ட விஷயங்கள், நான் கலந்து கொண்ட போராட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டேன். இதுதான் இன்றைய நிகழ்வு. இதைத்தாண்டி எனக்கும் அவருக்குமான உறவு நீண்ட நெடிய கால உறவு.

Advertisment

என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் அந்த கட்சியின் மேடையில் ஏற மாட்டேன். அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்பது அவருக்கு தெரியும். இன்றைக்கும் அந்த பயணம் தொடருகிறது.

அதுபோலத்தான் கமல்ஹாசனுடைய உறவு என்பது. அந்த உறவில் பிரிவு இருக்காது. மக்களுக்கான போராட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள். மக்களை எப்படி அணுகுகிறீர்கள். எப்படி எதிர்கொள்கிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தை மக்கள் எப்படி நினைக்கிறார்கள். மக்கள் பார்வையில் எப்படி மக்கள் நீதி மய்யம் இருக்கிறது என்பது பற்றி அறியதான் உயரிய நோக்கத்துடன் அழைத்திருந்தார். நானும் என்னுடைய கருத்தையும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்தையும் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் பேசினேன்.

2009ல் ஈழப் பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது அன்றைக்கு துணை முதல் அமைச்சராக இருந்த ஸ்டாலின் ராயபுரத்தில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார். அந்த மனித சங்கிலி போராட்டத்தில் இயக்குநர் சங்கத்தையும் மீறி கலந்து கொண்டேன். என்னுடைய நோக்கம் அரசியல் கிடையாது. எப்படியாவது அந்த போரை நிறுத்த வேண்டும் என்பதுதான். போரை நிறுத்த வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து வரும்போது அவர்களுடன் நிற்பேன்.

உங்கள் பார்வையில் மக்கள் நீதி மய்யம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மக்கள் எல்லோரையும் பார்வையாளராக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேதான் மக்கள் நீதி மய்யத்தின் பார்ட் என்ன என்று சொல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. ஆகவே மக்கள் அந்த தேர்தலை நோக்கித்தான் இருப்பார்கள். இதில் மக்கள் நீதி மய்யம் என்ன ஆகும். ரஜினி மக்கள் மன்றம் என்ன ஆகும் என்பதெல்லாம் இல்லை.

இதேபோல் ரஜினி மக்கள் மன்றம் அழைத்தால் போவீர்களா?

நல்ல விஷயத்துக்காக அழைத்தால் போவேன். ஆளும் கட்சி மீதும், எதிர்க் கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். புதிய தலைமை வேண்டும் என்று மக்கள் நினைக்கும்போது, வரக்கூடிய தலைமை எந்த சித்தாந்தத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம். அந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் ஒருவருடன் நாம் சேர முடியுமே தவிர, வெறும் பிம்பத்தை பார்த்து சேர முடியாது. இவ்வாறு கூறினார்.

future Makkal needhi maiam kamalhaasan ameer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe