Skip to main content

’'பெரும்பான்மை பலம் எனக்குத்தான்; பொதுக் குழுவைக் கூட்டுங்கள்‘’ - அமைச்சர்களிடம் எடப்பாடி!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

EPS

 

அ.தி.மு.க.வின் ‘முதல்வர் வேட்பாளர்’ போட்டியில் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் நேருக்கு நேர் மோதல் வெடித்ததால் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் விழித்துள்ளனர் அ.தி.மு.க செயற்குழு சீனியர்கள். இருவருமே இணைந்து முடிவெடுக்கட்டும் என தற்காலிகமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி.முனுசாமி.

அதேசமயம், ’’போட்டியே ரெண்டு பேருக்கும்தான். இதில் இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சனைக்கு முடிவு கட்டுங்கள் என்றால் எப்படிப் பிரச்சனை தீரும்?‘’ என கே.பி.முனுசாமியை துளைத்திருக்கிறார்கள் செயற்குழு உறுப்பினர்கள். அதற்கு கே.பி.முனுசாமி, ‘’இரண்டு பேரும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தால் பிரச்சனை எப்படித் தீரும்? அதனால் தான் தற்காலிகமாக இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தது. கொஞ்ச அவகாசம் இருந்தால் எல்லாம் சரியாகும். 7- ஆம் தேதிக்கு என்ன முடிவுன்னு அப்புறம் பார்த்துக்கலாம்‘’ என விளக்கமளித்திருக்கிறார்.

இந்த நிலையில், செயற்குழு முடிந்து வெளியேறிய எடப்பாடியும், பன்னீரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகின்றனர். செயற்குழுவில் ஓ.பி.எஸ் மோதியதை ஜீரனிக்கமுடியாத எடப்பாடிக்கு, தனது இல்லத்துக்கு வந்த பிறகும் கூட கோபம் குறையவில்லையாம். 

அந்தக் கோபத்துடனே, தனது ஆதரவு அமைச்சர்களிடம் பேசிய எடப்பாடி, ‘’செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது, என்பதை நிரூபித்துவிட்டேன். அதுபோதும் எனக்கு. இதே நிலை தொடர்ந்தால், பொதுக்குழுவிலும் எனக்கான ஆதரவை நிரூபிப்பேன். ரொம்பவும் என்னை டென்சன் படுத்திவிட்டார். அவர் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளட்டும். பொதுக்குழுவைக் கூட்டுவோம். ஓட்டெடுப்பு நடத்துவோம். அதில் யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம். விடமாட்டேன். நாலு வருசம் நல்லாட்சியை நான் தந்திருக்கும் போது என் தலைமையில் தேர்தலைச் சந்தித்தால் என்ன?‘’ என்றெல்லாம் ஆதங்கமாகவும் கோபமாகவும் வெடித்திருக்கிறார் எடப்பாடி.

 

Ad


இதேபோல, தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் சீனியர்களிடம் விவாதித்துள்ளார் பன்னீர். அப்போது, ‘’இன்றைக்கு நான் பேசியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? நியாயத்தைத்தானே சொன்னேன். அதற்கு எப்படிக் கோபப்படுகிறார் பாருங்கள். அதிகாரம் ஆசை தலைக்கு ஏறிவிட்டது. அதெப்படி, ரெண்டு பேரும் சேர்ந்து முடிவுபன்றது? ஏதோ, கே.பி.எம்.சொன்னாரேன்னு ஒப்புக்கொண்டேன்.  இனி கட்சித் தொண்டர்கள்தான் முடிவு பண்ண வேண்டும். பொதுக்குழுவைக் கூட்டுவோம். ஆதரவு யாருக்கு அதிகமிருக்கிறதுன்னு பார்த்துடலாம்‘’ என அவரும் கோபம் குறையாதவராகவே ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.