Skip to main content

திமுகவில் மைத்ரேயன்..? அச்சத்தில் அதிமுக!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

"மாநிலங்களவையை பொறுத்த வரையில் எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம், ஆனால், மாநில அரசியலில் இனிமேல் தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்க இருக்கிறது" கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தில்லி மாநிலங்களவை உறுப்பினராக இருந்து நேற்றோடு ஓய்வு பெற்ற மைத்ரேயன் கூறிய வார்த்தைகள்தான் இது. அதுவும் இந்த செய்தியை மாநிலங்களவையில் தன்னுடைய கடைசி உரையில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மைத்ரேயன், தொடர்ந்து மூன்றுமுறை ஜெயலலிதாவால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார். அந்த வகையில் அதிமுகவில் இதுஒரு பெரிய சாதனை என்று தான் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவா? பன்னீரா? என்ற நிலை ஏற்பட்டபோது அவர் ஓபிஎஸ் பக்கம் நின்றார். மேலும், தன்னுடைய மாநிலங்களவை பதவிக்காலம் நிறைவடைவதை குறிப்பிட்டு, அவர் நடந்து முடிந்த மக்களவை தேர்லி்ல் போட்டியிடுவதற்கு கட்சி தலைமையிடம் வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், நான் இறந்தால் கூட எனக்கு இரங்கல் தெரிவிக்காதீர்கள் என்று கூறினார்.  இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தவில்லை என்பதை இதற்கு காரணமாக கூறினார்.
 

 maithreyan will join in dmk



இதை அதிமுக உறுப்பினர்கள் உட்பட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், நிறைவாக பேசும்போது மாநில அரசியலில் இனி சாதிப்பேன் என்று அவர் கூறியதை தான், அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள் அதிமுக முன்னணியினர். எதை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசினார் என்ற விவாதம் இப்போதே கட்சியினர் மத்தியில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், ஓபிஎஸ் தரப்பும் அவரை பெரிய அளவில் கண்டுகொள்ளாத நிலையில், அவர் தான் ஜொலிப்பேன் என்பதும், அதுவும் சூரியோதயம் என்று அவர் கூறுவதும், சூரிய கட்சியை மனதில் வைத்துதான் என்று ஒரு டாக் அரசியல் அரங்கில் ஓடுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் இணையும் அதிமுகவின் முன்னாள் எம்.பி மைத்ரேயன் 

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

Former AIADMK MP Maitreyan joining BJP

 

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கட்சிக்குள் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார். பின்பு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவரது அணியில் இருந்தார். பின்னர் பல்வேறு சர்ச்சையின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அணியின் பக்கம் வந்தார். 

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மைத்ரேயனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதற்காக மைத்ரேயன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Next Story

'அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன் நீக்கம்'- எடப்பாடி பழனிசாமி உத்தரவு! 

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

'Removal of Maitreya from ADMK'- Edappadi Palaniswami orders!

 

ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த நிலையில், மைத்ரேயனை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறைக் குலையும் வகையில் நடந்துக் கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மைத்ரேயன், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.