Advertisment

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு... ராமதாஸ் இரங்கல்.. 

Maharashtra government hospital children incident pmk ramadoss Mourning

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இன்று (09/01/2021) அதிகாலை 02.00 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக 7 பச்சிளங்குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இதற்கு இரங்கல் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிக்கும் இரங்கல் செய்தி:“மராட்டிய மாநிலம், பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

Government Hospital Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe