Skip to main content

பொது விவாதத்துக்குத் தயாரா? அரசியலைவிட்டு விலகத் தயார்! - மா.சுப்பிரமணி Vs சைதை துரைசாமி!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

 Ma Subramanian responds to Saiத்ai Duraisamy allegation with evidence 


தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அதேவேளையில் வேட்பாளர்கள், அவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை விமர்சித்தும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தும் பிரச்சாரம் செய்து நடத்திவருகின்றனர். 

 

அந்த வகையில், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, நேற்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “வழக்கு நிலுவையில் உள்ளது என திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார். அது, எது தொடர்பான வழக்கு எனக் கேள்வி கேட்டிருந்தேன். பொதுத் தளத்தில் விவாதிக்கலாம் எனப் பதிலளித்தார். ஆனால் எங்கே என இதுவரை பதிலளிக்கவில்லை.

 

 Ma Subramanian responds to Saiத்ai Duraisamy allegation with evidence 

 

கிண்டி லேபர் காலணியில் மா.சுப்ரமணியன் வீடுகளை அபகரித்துள்ளார். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டை மா.சுப்பிரமணியன், தனது மனைவியின் வீடு எனக் கடந்த தேர்தலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மேயர் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து வீட்டை அபகரித்துள்ளார். தேர்தல் களம் வேண்டாம் என ஒதுங்கி இருந்தேன். ஆனால் மக்களும் கட்சியும் போட்டியிட விரும்பியதால் போட்டியிடுகிறேன். 

 

கள்ள வாக்குகளுக்காகப் போலி ஆவணங்கள் தயாரிக்கும் பணிகளை திமுக அண்ணா அறிவாலயத்திலேயே செய்கிறது. 2006 உள்ளாட்சித் தேர்தலில் திமுகவில் சேரச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. நான் மறுத்துவிட்டேன். நீங்கள் வரவில்லை என்றால் மக்களால் தேர்வு செய்யும் முறையை மாற்றுவோம் என்று மிரட்டினார்கள். அதன்பிறகுதான் முறை மாற்றப்பட்டது. சைதை தொகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளதாக மா.சுப்ரமணியன் சொல்கிறார். இருக்கும் 998 தெருக்களில் எப்படி 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடியும்” என சைதை துரைசாமி கேள்வி எழுப்பினார்.

 

 Ma Subramanian responds to Saiத்ai Duraisamy allegation with evidence 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இதற்கு விளக்கம் அளித்துள்ள திமுக சைதாப்பேட்டை வேட்பாளர் மா.சுப்பிரமணியம், “நேற்று சைதை துரைசாமி, நான் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வீட்டை அபகரித்துவிட்டேன்; அது என் மனைவியின் பெயரில் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். கிண்டி லோபர் காலணியில் அமைந்துள்ள அந்த வீட்டின் அளவு 1,100 சதுரடி. இதனை 1995ஆம் ஆண்டு என் நண்பர் ஜம்புலிங்கம், நான் வாடகை வீட்டில் வசித்துவருவதைப் பார்த்து, எனக்கு அவரது செலவில் ரூ.2,30,000 கொடுத்து அந்த வீட்டை வாங்கிக் கொடுத்தார். அந்த வீட்டை என்றால், அந்த வீட்டின் மேல் கூரையை மட்டுமே, நிலத்தை அல்ல. இதனைத்தான், நான் ஒவ்வொரு முறை தேர்தல் போட்டியிடும் போதும் தேர்தல் ஆணையத்திடம், கிண்டி லேபர் காலணியில் 1,100 சதுரடியில் வீடு மேற்கூரை மட்டும் எனக்குச் சொந்தம், நிலம் கிண்டி சிட்கோவுக்கு சொந்தம் எனத் தெரிவித்துள்ளேன். 

 

இந்தச் சொத்து விவரமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு நான், என்னைக் கைது செய்யக்கூடாது எனவும் தடை வாங்கியிருக்கிறேன். இருந்தும் என்னைக் கைது செய்யப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். உச்சபட்சமாக, உச்சநீதிமன்றம் சென்று இந்த சென்னை உயர்நீதிமன்றத் தடைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தனர். அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

 

 Ma Subramanian responds to Saiத்ai Duraisamy allegation with evidence 

 

இதனிடையே அவரது வழக்கறிஞரிடமிருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஒரு தனியார் தொலைகாட்சியில் விவாதத்திற்கு அழைத்தார். அதற்கு நான், தனியொரு தனியார் தொலைகாட்சி வேண்டாம், மொத்த பத்திரிகையாளர்களையும் அழைத்து விவாதம் நடத்துவோம் என்றேன். அதற்குப் பதில் இல்லை. என் மனைவி பெயர் காஞ்சனா, அவரது தந்தை பெயர் சாரங்கபாணி. ஆனால், சைதை துரைசாமி, கண்ணனின் வாரிசு என்று பொய்யாகச் சான்றிதழ் அளித்து வாங்கினேன் என்கிறார். 2003 வரையிலான ரேஷன் கார்டு இது, அதன் பிறகு தற்போது இருக்கும் ரேஷன் கார்டு இது. இதில், எங்கையாவது என் மனைவியின் தந்தை பெயர் கண்ணன் என இருந்தால் நிரூபிக்கட்டும். இது மட்டுமின்றி சிவில் சப்ளைஸ் எந்த ஆவணத்திலாவது கண்ணன் எனும் பெயரை காண்பிக்கட்டும். நான், இன்றே அரசியலை விட்டு விலகத் தயார்” எனச் சவால் விட்டுள்ளார்.   

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.