Skip to main content

மாரத்தான் நாயகர் மா.சு.வின் சர்வதேச விர்ச்சுவல் மாரத்தான் ஓட்டம்! 

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

 

M. Subramaniam

                     

தமிழகத்தின் 'மாரத்தான் நாயகர்' என வர்ணிக்கப்படும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், புதுமையான மாரத்தான் நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்.  

                
தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில், ‘கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் (விர்ச்சுவல்) மாரத்தான்’ ஓட்டத்தை இணைய வழி மூலம் நடத்தி வருகிறார் மா.சுப்ரமணியன். 


இந்த மாரத்தான் ஓட்டத்தின் இணைய வழி தொடக்கத்தைக் கடந்த 6-ஆம் தேதி அறிவாலய வளாகத்தில் துவக்கி வைத்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். கரோனா பேரிடரான இந்த நெருக்கடியான காலத்தில், ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதை ஆரம்பத்தில் இருந்தே அறிவுறுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். 

                  

அந்த வகையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்கவும், அதன் தேவையினை எடுத்துச் சொல்லவும் சர்வதேச மாரத்தான் ஓட்டத்தை ஒருங்கிணைத்தார் மா.சுப்ரமணியன். புதுமையான முறையில் துவக்கப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரசு நாடுகள், பின்லாந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து எண்ணற்ற மக்கள் இதில் கலந்து கொண்டு ஓடினார்கள். 

             

M. Subramaniam

 

இது குறித்து மா.சுப்ரமணியனிடம் நாம் பேசிய போது, "உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையத்தளம் வாயிலாக தங்களைப் பதிவு செய்து கொண்டு இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ளலாம். ஆகஸ்ட்-7 முதல் 25 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 31 வரை இந்த ஓட்டம் நடந்து கொண்டிருக்கும். 

                        

வீட்டு மாடியில், தோட்டத்தில், ட்ரட்மில்லில், எனத் தங்களின் வாழ்விடங்களுக்கேற்பவும் வாய்ப்புகளுக்கேற்பவும் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடலாம். இந்த விர்ச்சுவல் மாரத்தானில் கலந்து கொண்டு ஓடுபவர்களுக்கு அதற்கான சான்றிதழும் இணையம் வழியாகவும், அதற்குரிய பதக்கம் அஞ்சல் மூலமாகவும் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

                      

http://onelink.to/nknapp

 

அவரவர் நாடுகளில் உள்ள ஊரடங்கு சட்ட விதிகள், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள், தனி மனித இடைவெளி ஆகியவைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கலந்து கொள்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு வயது தடையில்லை. மேலும், இதில் கலந்துகொள்ள 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மாரத்தான் ஓட்டம் நிறைவு பெற்றதும், கட்டணம் பெறப்பட்ட மொத்த தொகையும் கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்க்ய் பயன்படுத்தப்பட்டு, அந்த உபகரணங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்!"  என்கிறார் பெருமிதமாக மா.சுப்ரமணியன்.

                   

மாரத்தான் நாயகரின் இந்தப் புதிய முயற்சி கின்னஸில் இடம் பெறும் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.