Skip to main content

வாக்கு செலுத்தப்போகும்போது சரியான அளவில் பேருந்துகள் இருக்காததற்கு என்ன காரணம்???

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

நேற்று மக்கள் அனைவரும் வாக்களிக்க மிகுந்த ஈடுபாட்டோடு சென்றிருந்தனர். முக்கியமாக சென்னையிலிருக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலையில் இருந்தே கிளம்பத் தொடங்கிவிட்டனர்.
 

voting


பேருந்து, ரயில் என அனைத்தும் நிரம்பி வழிந்தன. பேருந்தின் மேற்கூரையில் உட்கார்ந்துகொண்டும், ரயில் என்ஜினில் நின்றுகொண்டும் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். நேற்று முன்தினம் கோயம்பேட்டில் பரபரப்பாகி கல்வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. செங்கல்பட்டுவரை போக்குவரத்து நெரிசல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

வாக்களிக்க அனைவரும் செல்வதால் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படவும், முன்னேற்பாடுகளும், சரியாக செய்யப்படவில்லை. இதுதான் அந்த களேபரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்தது.  மேலும், தீபாவளி, பொங்கலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுபோல இதற்கும் ஏன் முன்னேற்பாடுகள் செய்யவில்லை. ஒருவேளை ஓட்டளிப்பதை ஆளுங்கட்சி விரும்பவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தும், எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாததால், ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாக்களிக்க சென்றுவிட்டனர். இதனால் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. இப்படியான பல்வேறு காரணங்கள்தான் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.