Skip to main content

வாக்கு செலுத்தப்போகும்போது சரியான அளவில் பேருந்துகள் இருக்காததற்கு என்ன காரணம்???

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

நேற்று மக்கள் அனைவரும் வாக்களிக்க மிகுந்த ஈடுபாட்டோடு சென்றிருந்தனர். முக்கியமாக சென்னையிலிருக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலையில் இருந்தே கிளம்பத் தொடங்கிவிட்டனர்.
 

voting


பேருந்து, ரயில் என அனைத்தும் நிரம்பி வழிந்தன. பேருந்தின் மேற்கூரையில் உட்கார்ந்துகொண்டும், ரயில் என்ஜினில் நின்றுகொண்டும் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். நேற்று முன்தினம் கோயம்பேட்டில் பரபரப்பாகி கல்வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. செங்கல்பட்டுவரை போக்குவரத்து நெரிசல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

வாக்களிக்க அனைவரும் செல்வதால் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படவும், முன்னேற்பாடுகளும், சரியாக செய்யப்படவில்லை. இதுதான் அந்த களேபரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்தது.  மேலும், தீபாவளி, பொங்கலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுபோல இதற்கும் ஏன் முன்னேற்பாடுகள் செய்யவில்லை. ஒருவேளை ஓட்டளிப்பதை ஆளுங்கட்சி விரும்பவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தும், எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாததால், ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாக்களிக்க சென்றுவிட்டனர். இதனால் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. இப்படியான பல்வேறு காரணங்கள்தான் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.